NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Friday, November 26, 2010

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்

Posted by Rikaz Network Inc. 1:29 PM, under | No comments


கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.

* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையில்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.

* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.

* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…

* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.

* தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)

* இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.

இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்


Read more Click On nusrik



இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு

Posted by Rikaz Network Inc. 1:25 PM, under | No comments

இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு

கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய தேவையில்லை. இணையத்தில் தேட வேண்டுமா?உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.

இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.

ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.


Read more Click On nusrik



autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine

Posted by Rikaz Network Inc. 1:23 PM, under | No comments

கணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம் அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டி வைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.

பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும். உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும்.

அடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருங்கள்.


நீங்கள் எதற்கு அடிமை?

Posted by Rikaz Network Inc. 1:20 PM, under | No comments


'மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லை. கள் தீங்கு தரக் கூடியது. அதுவோ இருந்த இடத்தில் விற்றுப் போகிறது!' - கவிஞர் கபீர்.

எங்கே செல்லும் இந்த போதை என்று தடுமாறுபவர்களே இங்கே கொஞ்சம் இளைப்பாறிவிட்டு செல்லுங்கள்.

Self medication' எனப்படும் சுயமாகத் தன் வேதனைகளுக்கு மருந்து தேடிக்கொள்வதன் மூலம்தான் போதைக்கு அடிமையாதல் நிகழ்கிறது என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். அகராதிகளோ 'ஒரு விஷயத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுவதுதான் போதை' என் கின்றன. சமூகத்தின் எந்தத் தளத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும், எந்தப் பிரிவினைச் சேர்ந்த வராக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு போதைக்கு ஆட்படத்தான் செய்கிறார்கள். இங்கு 'போதை' என்பதை புகை, மது என்ற பழக்கத்தில் மட்டும் அடக்க வேண்டாம்.வீடியோ கேம்ஸ், செல்போன், இணையம், அதிகம் சாப்பி டும் பழக்கமான 'ஓவர் ஈட்டிங்', கட்டுப்பாடு இல்லாமல் செலவழிப்பது, வகை தொகை இல்லாமல் காணும் அனைத்து ஆண்கள்/பெண்களிடமும் 'நட்பு' பாராட்டி உறவு வளர்க்க முனைவது எனப் போதை தரும் விஷயங்கள், பட்டியலிட முடியாத அளவுக்கு மகா மெகா நீளமானது. அவற்றில் தொலைந்துபோகாமல் இளம் தலைமுறையினர் தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்வது எப்படி? வழிகாட்டுகிறார்கள் இவர்கள்...

"போதைப் பழக்கம் என்றால், மது அருந்துவது மட்டும்தான் என்ற கருத்து தவறானது. பொருட்களுக்கு அடிமையாகும் 'substance addiction' மற்றும் இயல்பான பழக்கத்துக்கு எதிராகச் செயல்படும் பண்புகளுக்கு அடிமையாதல், அதாவது 'Behaviour addiction' என போதைக்கு அடிமையாவதையே இரண்டு வகையாகப் பிரிக்கலாம்!" என்று முதல் வரியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவரும், ஆய்வாளருமான டாக்டர் யாமினி கண்ணப்பன். "ஒயிட்னர் போன்ற சிந்தெட்டிக் ட்ரக்ஸ், கொக்கைன் போன்ற பார்ட்டி ட்ரக்ஸ், தூக்க மாத்திரைகள், இருமல் டானிக் போன்ற மருந்துப் பொருட்கள் என கலாசார மாற்றங்களுக்கு ஏற்ப, போதையின் வடிவம் மாறி வருகிறது. இந்தப் பொருட்கள் ஒருவிதத்தில் 'பெர்ஃபாமன்ஸ் பூஸ்டர்'களாக இருந்து, ஒரு மயக்கத்தை அளிக்கும். மேலும், தேர்வு சமயங்களில் வெகுநேரம் விழித்து இருந்து படிப்பது, ஷிப்ட்களில் வேலை செய்வது போன்ற மன அழுத்தம் தரும் விஷயங்களுக்காக இதுபோன்ற வடி கால்களை நாடுகிறார்கள். சமீபத்தியக்கணக்கு எடுப்பு, 17 வயதில் இருந்தே இதுபோன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகத் தொடங்குகிறார்கள் என்கிறது. அதாவது, கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே, போதை தரும் விஷயங்கள் அறிமுகமாகி விடுகின்றன.

பண்பியல் சார்ந்த அடிக்ஷன்களை எடுத்துக்கொண்டால், 'withdrawal symptoms இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதாவது, இணையத்தில் மேய்ந்துகொண்டு இருக்கிறார்கள். திடீரென்று ஏதோ ஒரு காரணத்தால் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. 'மீண்டும் எப்போது இணையத்தில் இணைவோம்' என்று வேறு வேலைகளை மறந்து, அதிலேயே அவர்களின் கவனம் இருக்கும். நிஜ வாழ்க்கையில் சாதிக்க முடியாத சில விஷயங்களை விர்ச்சுவல் உலகத்தில் சாதிக்க முடியும் என்று நினைப்பதால்... இணையம், சமூக வலைதளங்கள், கேமிங் சமாசாரங்கள் ஆகியவற்றை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இன்று சுமார் 90 சதவிகித மக்களுக்கு செல்போன் இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது. திக்குத் தெரியாத காட்டில்விட்டதுபோல உணர்கிறார்கள். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பும்போது, சிக்னல் பிரச்னையால் அது டெலிவரி ஆகவில்லை என்றால், உலகமே இருண்டுவிட்டது போன்ற ஒரு மயக்கத்துக்கு ஆளாகிறார்கள். எப்படி சூதாட்டத்தில் எவ்வளவு இழந்தாலும் ஒரு முறை வெற்றிபெற்றுவிட்டால், மீண்டும் மீண்டும் விளையாடுவார்களோ, அதுபோலவே செல்போனைக் கையில் எடுத்துவிட்டால், அதைத் தொடர்ந்து உபயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க மறுக்கிறார்கள். இந்தக் கருவி என் வாழ்க்கையை நல்லதாக மாற்றி இருக்கிறது என்பதைவிட, என் வாழ்க்கைக்குப் போது மானதாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்!" என்கிறார் யாமினி.

"கவலை மறந்து, பொய்யான சந்தோஷத்தில் மிதக்கப் பல போதை விஷயங்கள் இருக்கின்றன. சந்தோஷம் நம் வாழ்க்கையின் ஓர் அம்சம். அதை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம். ஆனால், அதைச் சில மணி நேரங்களில் அனுபவித்து முடித்துவிடவே இன்றைய இளைய தலைமுறை விரும்புகிறது. அதற்கு ஒரு பாதை இந்த போதை!" என வாழ்வியல் உண்மையோடு போதையின் இன்னொரு பக்கம் சுட்டுகிறார் சென்னை, டி.டி.கே. போதை மறுவாழ்வு மையத்தின் மருத்துவச் சேவைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.

"இளைஞர்கள் மதுவைத் தேடி ஓடுகிறார்கள் என் றால், அதை வீதிக்கு வீதி சுலபமாகக் கிடைக்கும்படி நாம் செய்துவிட்டோம். ஐ.டி. இளைஞர்கள் பலர் மன அழுத்தம் குறைய போதையைத் தேடுகின்றனர் என்பது தவறான கருத்து. ஐ.டி. இளைஞர்கள் என்று இல்லை; தேவைக்கு மேல் அதிக பணம் வைத்திருப்பவர்கள் அனைவருமே 'instant pleasure' என்பதை எதிர் பார்க்கிறார்கள். 20 வயதில் பீர் மட்டும் சாப்பிட்டேன் என்பார். ஆறு மாதம் கழித்து, ஒரு பெக் விஸ்கி மட்டும் என்பார். அடுத்த மூன்று மாதங்களில் இரண்டு, மூன்று என ரவுண்ட்கள் அதிகரிக்கும். இறுதியில், மருத்துவர் துணைகொண்டு மீட்கும் அளவுக்குச் சென்றுவிடுவார். இளைஞர்களுக்கு இருக்கும் ஒரு தவறான சிந்தனை, 'நாம நினைக்கிறபோது வேண்டாம்னு நிறுத்திடலாம்' என்பது. ஆனால், துரதிருஷ்டவசமாக அப்படி நிறுத்த முடியாது.

மது என்பது அல்ல; வேறு எந்த வகையான போதைப் பழக்கங்களுக்கு அடிமையானாலும், மறுவாழ்வு மையச் சேவைகள் மூலம் மீட்டு எடுக்கலாம். டி-டாக்ஸிஃபிகேஷன், சைக்கோ தெரபி, ஃபாலோ-அப்... இந்த மூன்றினால் போதைக்கு அடிமையான ஒரு வரை விடுவிக்க முடியும். ஆனால், நம் நாட் டில் இறுதிக் கட்டமான 'ஃபாலோ-அப்'பை மட்டும் பெரும்பான்மையான மக்கள் தொடர்வது இல்லை. அதிலும் இளைஞர்கள் சுத்தமாகத் தொடர்வது இல்லை. அதனாலேயே மீண்டும் அந்தப் பழக்கங்களில் விழுகிறார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் போதைக்கு அடிமையான கணவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவார். இனிமேல் போதையில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவருடைய மனைவிக்கு வகுப் புகள் எடுப்போம். இன்று அப்படி இல்லை. மகன் சிகிச்சைக்காக வருகிறான். அவன் தாய்க்கு நாங்கள் வகுப்புகள் எடுக்கிறோம்!" என வருத்தத்துடன் தன் கருத்துக்களைச் சொல்கிறார் அனிதா.

"எந்த ஒரு செயலுக்கு ஒருவர் முழுவதுமாகத் தன்னை அடிமையாக்கிக்கொள்கிறாரோ, அது எல்லாமே அவர்களுக்கு ஏற்படக்கூடிய போதைதான்!" என்று தொடங்குகிறார் மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பேராசிரியர், முனைவர் ஜான்சி சங்கர். "போதை மருந்துகளை எப்படிப் பயன்படுத்தணும், எங்கெங்கே, என்னவிதமான போதைப் பொருட்கள் கிடைக்கும் போன்ற விஷயங்களை சினிமாவிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் மாணவர்களுக்கு 'நாமும் அதைச் செய்து பார்த்தால் என்ன?' என்கிற அடிப்படை ஆசை மனதில் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னைகள் மேலும் அதிகம் ஆகாமல் இருப்பதற்கு ஒரு வழி கவுன்சிலிங். இன்று, போதைப் பொருள் சம்பந்தமான விழிப்பு உணர்ச்சி மாணவர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை. அதனால் இப்போது எல்லாம் கல்லூரிகளிலேயே கவுன்சிலிங் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். போதை மருந்துத் தடுப்பு மையங்கள் ஏற்படுத்தி, அதில் மாணவர்களையே ஈடுபடுத்தி, அவர்கள் மூலமா கவே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினால்தான், இதை ஓரளவாவது தடுக்க முடியும்.

போதைப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தவிர்க்க சுய கட்டுப்பாடு தேவை. யோகா, தியானம் போன்ற மனநலப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றுடன் நல்ல புத்தகங்கள், ஆரோக்கியமான நட்பு வட்டம், பெற்றோர்களுடன் மனம்விட்டுப் பேசுதல் ஆகியவையும் இருந்தால், போதையின் பிடியில் இளைய சமுதாயம் எப்படிச் சிக்கும்?" என்று கேள்வியுடன் முடிக்கிறார் ஜான்சி.

'யாருக்குத்தான் துன்பம் இல்லை இந்த உலகத்தில்? துன்பத்தைச் சந்திக்காத எவரும் இன்பத்தைச் சந்திக்கப் போவது இல்லை!' என்ற கலீல் ஜிப்ரானின் வரிகளை நினைவில் வைத்திருங்கள் தோழர்களே. 'அவன் செய்கிறான் அதனால் நானும் செய்கிறேன்!' என்று வழி தவறாதீர்கள். முடிந்தால் அவரைத் திருத்துங்கள். நீங்களும் சகதியில் குதிக்க வேண்டாம்.

தவிர்த்திடு உடனே போதையை
சீராகும் உங்கள் வெற்றிப் பாதையே.

கணினியை பராமரிக்க எளிய வழிமுறைகள்

Posted by Rikaz Network Inc. 1:13 PM, under | No comments

இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.

கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.

நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனற்றதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது.

ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.

சில இணையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது.

எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபிடித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வழிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும்.

நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.

கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.

கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒப்றேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.

எப்படிச் செய்வது?

உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.

அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம்.

Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.

Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும்.

சில ஒப்றேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்கும். அதற்கும் Yes பொத்தானை அழுத்தவும்.

இப்போது கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செய்வதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்

வை-பை கதிர்கள் மனிதர்களை தாக்குகின்றதா? _

Posted by Rikaz Network Inc. 1:01 PM, under | No comments

வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்..

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

பயன் தரும் தளங்கள்

Posted by Rikaz Network Inc. 12:49 PM, under | No comments

இன்றைய நமது செய்தியாக உங்களுக்கு பயன் தரக்கூடிய தளங்கள் சில

1) அனைத்து முக்கிய மென்பொருள்களினதும் பழைய தொகுப்புக்களினை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஓர் தளம்

இணையதள முகவரி :http://www.oldversion.com

2) இணையத்தில் நமது புகைப்படங்களை இலக்கங்களாக மாற்றும் ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.picascii.com

3) 3D-ல் படம் வரையக்கற்றுத்தரும் ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.3dtin.com

4) கார்களை பழுதுபார்க்கக் கற்றுத்தரும் ஓர் தளம்

இணையதள முகவரி http://www.vehiclefixer.com

5) இணையத்தில் யுனிட் கன்வர்டர் செய்யக்கூடிய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.digitaldutch.com/unitconverter/

6) இணையத்தினூடாக பி.டி.எப் பைல்களை எக்செல் பைல்களாக மாற்ற உதவும் ஓர் தளம் (PDF to Excel)

இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com

7) இணையத்தினூடாக உங்கள் புகைப்படத்தை முப்பரிமாணமாக (3D) மாற்ற ஓர் தளம்

இணையதளமுகவரி : http://3d-pack.com

8) உங்கள் ஓவியப்படைப்புகளை விற்பனை செய்ய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.artflock.com

9) யுடியூப் வீடியோவினை எம்.பி.3 (MP 3 ) பாடலாக மாற்றுவதற்கான ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.listentoyoutube.com

10) கணனியின் அனைத்து மென்பொருட்களிற்குமான சோர்ட்கட்களை கற்றுத்தரும் ஓர் தளம்.

இணையதள முகவரி : http://www.shortcutworld.com


Read more Click On nusrik



Wednesday, November 24, 2010

இணைய அரட்டை

Posted by Rikaz Network Inc. 8:42 AM, under | No comments

இணைய அரட்டை

இணைய அரட்டை என்பது, தட்டச்சிட்டு தகவல் பரிமாறிக்கொள்ளும் ஒரு முறையாகும். ஆங்கிலத்தில் (Chat) என அழைக்கப்படுகின்றது. இது மின்னஞ்சல் அனுப்பும் முறையை போன்றிருந்தாலும், மின்னஞ்சல் போல் அல்லாமல் உடனுக்குடன் மற்றவரின் மறுமொழியைப் பார்த்து தகவல் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு இணைய வசதியாகும்.

இதனை ஆங்கிலத்தில் மெசஞ்சர் என்று அழைக்கப்படுகின்றது. மெசஞ்சர் என்பது தூதுவன் என்பதற்கான ஆங்கிலப் பதமாகும். அதற்கான காரணம் பழங்காலத்தில் அரசர்கள் தூதுவன் ஊடாகத் தூது அனுப்பியே தமாது தகவல் பரிமாற்றத்தை செய்துக்கொண்டனர். தற்போதைய இணைய உரையாடல் முறையும் அதற்கமைவாகவே கணனியிலிருந்து கணனிக்கு தூதுவனாக செயல்படுவதால் இவற்றையும் தூதுவன் என்றே அழைக்கின்றனர். இவை ஆரம்பத்தில் ASCII எனும் முறையில் அமைந்திருந்த இவ்வுரையாடல்கள், தற்போது யுனிக்கோட் எழுத்துருவில் பலமொழிகளிலும் பயன்படுகின்றது.

இலவச இணைய அரட்டை மென்பொருற்களாவன யாகூ, கூகிள் டோக், எம் எஸ் என், கெய்ன், ஸ்கைப் போன்றவைகளாகும். இவற்றை உங்கள் கணனியில் பதிவிறக்கி இணைய அரட்டையை தொடரலாம்.

யாகூ நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட யாகூ தூதுவன் ஆரம்பத்தில்யாகூ பேஜர் என்றே அறியப்பட்டது. இந்த யாகூ மெசஞ்சர் சேவையை யாகூ பயனர் கணக்கு ஒன்றைத் திறந்து பயன்படுத்தலாம். அத்துடன் உங்களுக்கு வரும் யாகூ மின்னஞ்சல்கள் குறித்த அறிவிப்புகளையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இதைத்தவிர கணனியூடாக குரல்வழி பேசும் வசதி, கணனி தொலைப்பேசி வசதி, மற்றும் கோப்புகளை பரிமாறிக்கொள்ளும் வசதி, குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, அரட்டை அறை சேவை வசதி என நிறைய வசதிகள் உள்ளன. அத்துடன் யுனிக்கோட் எழுத்துரு பயன்படுத்தி தமிழிலேயே அரட்டை அடிக்கலாம்.

இதை இங்கே பதிவிறக்கிக்கொள்ளலாம்.

http://messenger.yahoo.com/

http://www.yazakpro.com/chatstuff/yahoo/help/messengerdownloads.htm


எம் எஸ் என் மெசஞ்சர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினரால் 1999 யூலை 22 ஆம் நாள் முதன்முதல் வெளியிடப்பட்டது. 2006 யூன் 19 ஆம் நாளிருந்து இதை மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் என்றப் பெயரில் வெளியிட்டது. 2006 யூலை 12 முதல் யாகூ நிறுவனமும் மைக்ரோசொப்ட் நிறுவனமும் மேற்கொண்ட உடன்படிக்கையின் படி, மெசஞ்சர் தூதுவனையும் யாகூ தூதுவனையும் இணைத்து இணையக்கூட்டு உரையாடல்களுக்கு வழுவகுத்துள்ளனர்.

இதை பதிவிறக்கிக்கொள்ளவதற்கு.

http://messenger.msn.com/download/os.aspx

கூகிள் டோக் கூகிள் நிறுவனத்தின் 2005 ஆகஸ்ட் 24 ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச இணைய உரையாடல் மென்பொருளாகும். கூகிள் டோக் (Google Talk) இது இணணயமூடான ஒலி அழைப்பு வசதியையும் கொண்டுள்ளது. இது மற்ற தூதுவன்களைப் போல் அல்லாது XMPP புரோட்டகோல்லை பயன்படுத்துவடன் சக மற்ற தூதுவன்களையும் இந்த கூகிள் டோக் தூதுவனுடன் இணைவதை விரும்புகின்றது.

இதை பயன்படுத்துவதற்கு கூகிள் நிறுவனத்தின் மின்னஞ்சலான ஜி மெயில் பயனர் கணக்கு ஒன்றைத்திறந்து, பின் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.

இதனை இங்கே பதிவிறக்கிக்கொள்ளலாம்.

http://www.google.com/talk/


கெயிம் இணைய உரையாடல் மென்பொருளின் சிறப்பு என்னவென்றால் இது பல்வேறு இணைய உரையாடல் மென்பொருட்களையும் இணைக்கும் வசதியைக்கொண்டுள்ளது. எனவே தனித்தனியாக மற்ற இணைய உரையாடல் மென்பொருற்களை பதிவிறக்குவதையும் விட, கெய்ம் இணைய உரையாடல் மென்பொருளை மட்டும் பதிவிறக்கி சகல தூதுவர்களையும் பயன்படுத்தலாம். அதனுடன் ஒரு சொற்பிழை திருத்தி மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது.

இங்கே பதிவிறக்கிக்கொள்ளலாம்.

http://www.pidgin.im/

ஸ்கைப் மென்பொருளானது கணனி ஊடாக ஒலிவடிவிலும் எழுத்துவடிவிலும் ஒரே நேரத்தில் பலருடன் கலந்துரையாடக் கூடிய சிறப்பான மென்பொருளாகும். இந்த மென்பொருள் பயர்வோல் பாதுக்காப்பும் கொண்டது.

ஒரு ஸ்கைப் பயனர் இன்னொரு ஸ்கைப் பயனருடன் அல்லது ஸ்கைப் குழுவினருடன் (5 பேர்கள்) முற்றிலும் இலவசமாக ஒலிவடிவில் உரையாட முடியும். அத்துடன் வெப்கம் பொருத்தப்பட்டிருப்பின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே உரையாட முடியும். ஒரு சிறிய தொகை பணம் செலுத்துவதன் மூலம் உள்ளூர் தொலைப்பேசி அழைப்புக்களைப் போன்று மிகத்தெளிவான பன்னாட்டு இணைய தொலைப்பேசி வசதியையும் பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி இணையம் தவிர்ந்த தொலைப்பேசி மற்றும் கையடக்க தொலைப்பேசிகளினூடகவும் உரையாடமுடியும்.

இதனை பதிவிறக்குவதற்கு

http://www.skype.com/intl/en/download/skype/windows/




Read more Click On nusrik



இணைய உலாவிகள்

Posted by Rikaz Network Inc. 8:35 AM, under | No comments

இணைய உலாவிகள்

Read more Click On nusrik

இணைய உலாவிகள் என்பது மீயுரை பரிமாற்ற வரைமுறை http மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கணனி மென்பொருளாகும். இவை இணையப் பக்கங்களை சொடுக்கி சொடுக்கி பார்ப்பதற்கான இணைப்புக்களை தருவனதாகும்.

கீழே எல்லாவித உலாவிகளையும் பதிவிறக்கிக் கொள்வதற்கான மீயிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரும்பியதைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

பயர்பாக்ஸ் (Firefox) உலாவி ஒரு இலவச இணைய உலாவியாகும். இது மொஸிலா எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இன்றைய உலகில் அநேகமானோரின் விருப்பத்தை பெற்றுவரும் உலாவி இதுவாகும். இவ்வுலாவியை பாவித்தால் வைரஸ் தாக்கம் குறைவு என்று கூறப்படுகின்றது. ஆனால் இவ்வுலாவியை பாவிக்கும் பொழுது தமிழ் போன்ற பிறமொழிகள் திரையில் சரியாக தோன்றுவதில்லை என்ற சிக்கல் இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும் இதன் பாவனையாளர்கள் எண்ணிக்கை அன்மைகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இதனை பதிவிறக்குவதற்கு.

http://www.mozilla.com/en-US/firefox/

பயர்பொக்ஸ் உலாவிக்கான தமிழ் யுனிக்கோட் எழுத்துருவை கீழுள்ள சுட்டியில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=4

இண்டர்நெட் எக்ஸ்புலோரர் (Internet Explorer) இது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணைய உலாவியாகும். "காய்த்த மரத்திற்கே கல்லடி விழும்" என்பதற்கு ஏற்ப இவ்வுலாவியை குறிவைத்தே பல நச்சு நிறல்கள் ஏவப்படுகின்றன. இதனால் இவ்வுலாவியில் நச்சு நிறல்களின் தாக்கம் அதிகம் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் இன்றைய உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் உலாவியும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பதிவிறக்கிக்கொள்வதற்கு.

http://www.microsoft.com/windows/downloads/ie/getitnow.mspx

இது நெட்ஸ்கேப் நெவிகேட்டர் உலாவியாகும். இதை ஆரம்பக்காலங்களின் அதிகமானோர் பயன்படுத்திப்போதும், தற்போது இதனை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. 2% சத வீதமானோர் மட்டுமே பாவிப்பதாகக் கூறப்படுகிறது.

http://browser.netscape.com/downloads/

இந்த "ஒபேரா" உலாவியை ஒரு குறிப்பிட்ட அளவிளான மக்களே பாவிக்கின்றனர். இதை பாவித்தால் கணனியின் வேகம் வெகுவாக குறைகின்றது எனும் ஒரு கருத்தும் இருக்கின்றது.

http://www.opera.com/download/

உலாவிகளின் பாவனையாளர்களின் புள்ளி விபரம்

மேலே குறிப்பிட்ட உலாவிகளின் பாவனையாளர்களின் புள்ளி விபரங்களை (Internet world stats) கீழுள்ள தளங்களில் அறிந்துக்கொள்ளலாம்.

http://www.w3schools.com/browsers/browsers_stats.asp

http://www.internetworldstats.com/stats.htm

Read more Click On nusrik

கூகிளின் இணைய மொழிமாற்றி

Posted by Rikaz Network Inc. 8:31 AM, under | No comments

கூகிளின் இணைய மொழிமாற்றி [CLIR]

இன்று எத்தனையோ விதமான அறிவியல் நுட்பத் தகவல்களும், கணனிசார் பதிவுகளும், எண்ணற்றக் கற்கை நெறிகளும் இணையத்தில் குவிந்துக் கிடக்கின்றன. ஆனால் இவைகள் அதிகமாக ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. ஆங்கில அறிவு அற்றவர்களுக்கோ அவற்றின் முழுமையான பயனை பெறமுடியாமல் இருக்கின்றது. ஏன் தமிழர்களது நம்பகமான ஆங்கில இணையதளம் கூட பார்க்க முடிவதில்லை என்ற கவலை பலருக்கு இருக்கிறது.

உதாரணமாக "தமிழ்நெட்" இணையத்தளத்தின் இணைய முகவரியை (www.tamilnet.com) இட்டால் அத்தளம் தமிழில் காட்சி தருகிறது என வைத்துக்கொள்வோம் எப்படியிருக்கும்...? ஆம்! ஆங்கிலமே அவசியமில்லாமல் போய்விடும். அனைத்து ஆங்கிலத் தளங்களையும் தமிழிலேயே மொழிமாற்றி வாசித்துவிடலாம். ஆங்கிலம் அல்லாத உலக மொழிகள் அனைத்தையுமே தமிழில் மொழிமாற்றி வாசித்துவிடலாம்.

என்ன நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறதா?

ஆம்! அப்படியான ஓர் வசதியை விரைவில் Google ஏற்படுத்தித் தரப்போகிறதாம்.

Cross – Language Information Retrieval [CLIR] எனப்படும் கூகிளின் இணைய மொழிமாற்று வசதியை, கூகிள் நிறுவனம் கடந்த 2007 மே மாதம் அறிமுகப்படுத்தியது. அதன் ஆரம்பக் கட்டமாக தற்போது ஆங்கிலத்துடன் 12 மொழிகளை மொழிமாற்றும் வசதியை கூகிள் ஏற்படுத்தியுள்ளது. தமிழுக்கும் இந்த வசதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது நாம் எழுதிய ஒரு பகுதியை அல்லது நாம் வாசித்து அறிய விரும்பும் ஒரு பகுதியை Copy Paste செய்து, எந்த மொழியிலிருந்து, எந்த மொழிக்கு என்று தெர்வுசெய்து, "Translate" எனும் சுட்டியை அழுத்தி, நாம் விரும்பும் மொழியில் வாசித்துக்கொள்ளலாம்.

Translate a Web Page எனும் தேர்வூடாக ஓர் இணையத்தள முகவரியை இட்டு, அந்த இணையத்தளத்தின் அனைத்து உள்ளடக்கங்களையும் இன்னுமொரு மொழியில் மொழிமாற்றம் செய்து பார்க்கவும் முடியும்.

நான் ஒரு சீன மொழி இணையத்தள முகவரியை இட்டு Chinese to English என தேர்வு செய்து பரீட்ச்சார்த்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! சீன மொழியில் தென்பட்ட இணையத்தளம் ஆங்கிலத்தில் அருமையாக காட்சியளிக்கிறது.

இதுதான் அந்த சீன இணையத்தளம். (மொழிமாற்றும் முன்)


மொழிமாற்றிய பின், ஆங்கிலத்தில் இவ்வாறு காட்சியளிக்கிறது.


என்ன தமிழுக்கும் இவ்வாய்ப்பு கிடைத்தால் ஒரு கை பார்த்துவிடாலாம் என்கிறீர்களா!

அது சரி! அவ்வாய்ப்பை கூகிள் விரைவில் வழங்கும் என்று கூகிள் வேண்டிக்கொள்வோம். அதுவரை பிற மொழிகளை மொழிமாற்றி பார்ப்போம் வாருங்கள்.

Tuesday, November 23, 2010

Water or Coke - incredible?

Posted by Rikaz Network Inc. 9:38 AM, under | No comments

Read more Click On nusrik
Water or Coke - incredible? I could not believe this ............... Very Interesting







WATER



#1. 75% of Americans are chronically dehydrated.
(Likely applies to half the world population)


#2. In 37% of Americans, the thirst mechanism is so weak
that it is mistaken for hunger.

#3. Even MILD dehydration will slow down one's metabolism as 3%.

#4. One glass of water will shut down midnight hunger pangs for almost 100%
of the dieters studied in a University of Washington study.

#5. Lack of water, the #1 trigger of daytime fatigue.

#6. Preliminary research indicates that 8-10 glasses of water a day could
significantly ease back and joint pain for up to 80% of sufferers.

#7. A mere 2% drop in body water can trigger fuzzy short-term memory, trouble with basic math,
and difficulty focusing on the computer screen or on a printed page.

#8. Drinking 5 glasses of water daily decreases the risk of colon cancer by 45%, plus it can slash
the risk of breast cancer by 79%., and one is 50% less likely to develop bladder cancer. Are
you drinking the amount of water you should drink every day?



COKE


#1. In many states the highway patrol carries two gallons of Coke in the trunk to
remove blood from the highway after a car accident.

#2. You can put a T-bone steak in a bowl of Coke and it will be gone in two days.

#3. To clean a toilet: Pour a can of Coca-Cola into the toilet bowl and let the 'real thing'
sit for one hour, then flush clean.The citric acidin Coke removes stains from vitreous china.

#4. To remove rust spots from chrome car bumpers: Rub the bumper with a rumpled-up piece of Reynolds
Wrap aluminum foil dipped inCoca-Cola.

#5. To clean corrosion from car battery terminals: Pour a can of Coca-Cola over the terminals to bubble
away the corrosion.

#6. To loosen a rusted bolt: Apply a cloth soaked in Coca-Cola to the rusted bolt for several minutes.

#7. To bake a moist ham: Empty a can of Coca-Cola into the baking pan, wrap the ham in aluminum foil,
and bake. Thirty minutes before ham is finished, remove the foil, allowing the drippings to mix with the
Coke for a sumptuous brown gravy.

#8. To remove grease from clothes: Empty a can of Coke into the load of greasy clothes, add detergent,
and run through a regular cycle. The Coca-Cola will help loosen grease stains.
It will also clean road haze from your windshield.


FOR YOUR INFORMATION:

#1. The active ingredient in Coke is phosphoric acid. It will dissolve a nail in about four days.
Phosphoric acid also leaches calcium from bones and is a major contributor to the rising increase
of osteoporosis.

#2. To carry Coca-Cola syrup! (the concentrate) the commercial trucks must use a hazardous material
place cards reserved for highly corrosive materials.

#3. The distributors of Coke have been using it to clean engines of the trucks for about 20
years! Now the question is, would you like a glass of water?

or Coke?

Send this helpful info on to your friends
Read more Click On nusrik

கணிதமேதை அல் குவாரிஸ்மி

Posted by Rikaz Network Inc. 7:15 AM, under | No comments

Read more Click On nusrik
அல் குவாரிஸ்மி

சந்திக்கும்போது கைகுலுக்குதல்

Posted by Rikaz Network Inc. 6:40 AM, under | No comments

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புச்சகோதரர்களுக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நபிமொழி : 114 - NABIMOZI – 114

சந்திக்கும்போது கைகுலுக்குதல்

பராஉ(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து, அவ்விருவரும் கைகுலுக்கினால், அவ்விருவரும் பிரியும் முன் அவ்விருவரின் குற்றம் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 887)

அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நன்மையானவற்றில் எதையும் நீ குறைவாக எண்ணிவிடாதே! (அது) உன் சகோதரனை சிரித்த முகத்துடன் நீ சந்திப்பதாக இருப்பினும் சரியே! என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 892)

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்கள், ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். (அப்போது அங்கிருந்த) அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி) அவர்கள், எனக்கு பத்து குழந்தைகள் உண்டு. அவர்களில் எவரையும் நான் முத்தமிடமாட்டேன் என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ''இரக்கமில்லாதவன், (இறைவனால்) இரக்கம் காட்டப்படமாட்டான்'' என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 893)

நோயாளியை நலம் விசாரித்தல்

பராஇ இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நோயாளியை விசாரித்தல், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவனுக்கு பதில் கூறுதல், நீதியைப் பேணுதல், அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல், விருந்திற்கு அழைத்தால் செல்லுதல், ஸலாமை பரப்புதல் ஆகியவற்றை எங்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 894)

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு முஸ்லிம் மீது மற்றொரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து : 1) ஸலாமிற்கு பதில் கூறுதல், 2) நோயாளியை விசாரித்தல், 3) ஜனாஸாவில் கலந்து கொள்தல், 4) விருந்தை ஏற்றுக் கொள்ளல், 5) தும்மியவருக்கு பதில் கூறுதல் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 895)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் -நபிகள் நாயகம் (ஸல்)''.நூல்: ( புகாரி,முஸ்லிம் )

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook

Blog Archive

Blog Archive