NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Tuesday, August 23, 2011

கணவனின் கடமைகள்

Posted by Rikaz Network Inc. 9:42 AM, under | No comments


  • கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.
  • இதோ, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) ஆண்களை எச்சரிக்கிறார்கள்:
  • “பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
  • “பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
  • “பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
  • இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி(ஸல்) அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
  • நபி(ஸல்) அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.
  • சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி(ஸல்) அவர்கள் , ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி   அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி(ஸல்) அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!
  • பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
  • நபி அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)
  • சில முஸ்லிமல்லாத சகோதரர்கள் ''நபிகள் நாயகம் பெண்களை அடிக்க அனுமதித்துள்ளார்களே இது சரியா?'' என கேள்வி எழுப்பலாம், இதை நாம் கொஞ்சம் நடைமுறையோடு ஒப்பிட்டு சிந்தித்தால் அதில் உள்ள நியாயங்கள் புரியும், இயற்கையிலேயே ஆண்கள் உடல் பலத்தில் பெண்களை விட கூடியவர்களாக இறைவன் படைத்துள்ளான், ஆண்களுக்கு கோபம் ஏற்படும்போது அவன் செய்வதறியாது பெண்களை தாறுமாறாக அடித்து விட வாய்ப்பு உள்ளது, அதற்கு ஒரு நெறி முறையை சொல்லாவிட்டால் அவர்களுக்கு அந்த நேரத்தில் என்ன தோணுதோ அதை செய்துவிடுவார்கள், இது பெண்களுக்கு அதிகம் பாதிப்புடையதாக ஆகிவிடும், அதனால் இஸ்லாம் அவனுடைய கோபத்தை பல படித்தரங்களாக குறைக்கிறது, முதலில் தெளிவான மானக்கேடான விஷயங்களை அவர்கள் செய்யும்போதுதான் கோபப்பட வேண்டும் என்பதிலிருந்து சின்னச்சின்ன விஷயங்களை புறக்கணித்து விட வேண்டுமென்பதை புரிந்து கொள்ளலாம், அதற்கு வேறு பல சான்றுகளையும் மேலே கூறிய பல சம்பவங்களில் பார்த்தோம், அப்படியே கோபம் வந்தாலும் முதலில் அறிவுரை சொல்ல வேண்டும் அதன் பிறகும் மனைவி அந்த தவறிலிருந்து திருந்திக்கொள்ளாவிட்டால் பின்பு படுக்கையிலிருந்து சிறிது நாட்கள் விலகி இருக்க வேண்டும், இவ்வாறு அவனுடையை கோபத்தை தள்ளிப்போட வைத்து  இருவரும் பிரிந்திருக்கும் சில நாட்களில் அவனுடைய கோபம் வெகுவாக தணிந்து விடும், அந்தப்பெண்ணும் திருந்திவிட ஒரு வாய்ப்பு உள்ளது, அதுக்கு பிறகும் கூட அந்தப்பெண் திருந்தாவிட்டால்தான் இலேசாக காயம் ஏற்படாதவாறு அடிக்குமாறு சொல்லப்பட்டுள்ளது அது கூட முகத்தில் அடிக்க கூடாது, உடம்பில் காயம் ஏற்படும் படி அடிக்ககூடாது என்றெல்லாம் பல நிபந்தனைகள் உள்ளன, கணவன் எடுத்த எடுப்பில் கோபத்துடன் அடிப்பதை இஸ்லாம் பல நாட்கள் தள்ளிப்போட வைத்து இயல்பாகவே கோபத்தை குறைக்கிறது, அதன் பிறகு வெறுமனே சடங்குக்கு லேசாக ரெண்டு அடி அடித்துக்கொள் என்ற அளவுக்கு ஆண்களின் கோபத்துக்கு ஒரு அதிக பட்ச வெளிப்பாடாக இதைத்தான் கூறுகிறது இஸ்லாம், எனவே இது மனித நேயத்துக்கு எதிரானதாக கருத வேண்டிய அவசியமில்லை, மாறாக இது பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு சட்டமாகவே உள்ளது, அவர்களுக்கும் நாம் ஒரு தப்பு செய்கிறோம் என்பதை உணர போதிய அளவு கால அவகாசம் கிடைப்பதால் அவர்களும் திருந்திக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இதை இஸ்லாம் கூறுகிறது. இன்னும் சொல்லபோனால் நபிகள் நாயகம் தனது கடைசிபத்தாண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தால் கூட அரசு பணத்தில் சொந்த செலவுக்கு எடுக்ககூடாது  என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்ததால் அவர்களின் வாழ்கை மிகவும் வறுமையில்தான் ஓடியது, நூறு ஆடுகளைகொண்ட ஒரு ஆட்டுப்பண்ணையின் மூலம் வரும் வருமானத்தை வைத்தே வாழ்கைச்செலவுகளை செய்து வந்தார்கள் இதனால் பல சமயம் அவரின் மனைவிமார்கள் ''நீங்கள் செலவுக்கு தருவது பத்தவில்லை'' என்று நபிகள் நாயகத்துடன் சண்டை போட்டுள்ளார்கள், என்பதை பல சம்பவங்களின் மூலம் காண முடிகிறது, ஒரு கட்டத்தில் ''என்னால் உங்களுக்காக அல்லாஹ் தடைவித்தித்துள்ள செயல்கள் மூலம் செல்வத்தை திரட்ட முடியாது. வேண்டுமானால் நான் உங்களை விவாகரத்து செய்கிறேன் நீங்கள் விரும்பியவர்களை மணந்து கொள்ளுங்கள்'', என்று கூறுகின்ற அளவுக்கு நிலைமை சென்றது, ஆனாலும் அதற்காகவெல்லாம் நபிகள் நாயகம் எந்த ஒரு மனைவியையும் கைநீட்டி ஒரு அடி கூட அடித்தத்தில்லை என்பதை இங்கு குறிப்பிட்டால் அடிக்க வேண்டிய நிலைமை எவ்வளவு இறுதி கட்டமான நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ளலாம்,
  • நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி(ஸல்) அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.
  • பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
  • நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி)
  • சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி(ஸல்) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி   அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)
  • நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.
  • மேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19) இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. 
  • இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கும்.
  • எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
  • “முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
  • நபி(ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
  • ”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்துஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்திகொள்ளட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ)  நூல்: முஸ்லிம் 2915
  • உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலேதவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160
  • ”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவுஉட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)  நூல்: புகாரி 56
  • ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார்அதற்கு நபி அவர்கள்,’நீ உண்ணும் போதுஅவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் கண்டிக்கும் போது முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் (ஏதும் வெறுப்பு இருப்பின்) வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162”இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம்கொண்டவரே! 
  • உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: திர்மதி 1082
இது குறித்த மேலும் பல சம்பவங்களை உரை வடிவில் பார்க்க கீழே உள்ள லிங்குகளை சொடுக்கவும்
மனைவியின் ஆசைகளைப் பூர்த்தி செய்தல்   http://www.youtube.com/watch?v=J4qLMluJYuw
வீட்டில் பெண்களின் நிர்வாகம் http://www.youtube.com/watch?v=UQ2JBhgLz0g
பெண்களை புரிந்து கொள்ளுதல் http://www.youtube.com/watch?v=ZDMMo8RaoCM
கணவன் மனைவி உரிமைகள்...  http://www.youtube.com/watch?v=keGcsMvwIbE
பெண்களை அனுசரித்தல் http://www.youtube.com/watch?v=c_OZH8MpaXE
பெண்களிடம் ஆலோசனை கேட்டல் http://www.youtube.com/watch?v=c5RGtoDRukg&feature=watch_response

Saturday, August 20, 2011

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

Posted by Rikaz Network Inc. 12:33 PM, under | No comments

பாலஸ்தீன நாட்டு விடுதலைப் போராளிப் பெண் ஒருவரின் கதை இது. இவரின் பெயர் ரீம் அல் ரியாஸி. 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். காஸா நகரத்தைச் சேர்ந்தவர். ஹமாஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டார். சின்னக் குழந்தைகள் இருவரின் அம்மா.

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி இஸ்ரேலிய படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இவரது தற்கொலைத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டன்ர்.

பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த 08 ஆவது பெண் போராளி இவர்.

ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த இரண்டாவது தாய் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

ஹமாஸ் இயக்கத்தில் பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த முதல் பெண் போராளியும் இவரே ஆவார்.

பாலஸ்தீன விடுதலைப் போராளிகளில் அநேகர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.

இஸ்ரேலியர்கள் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது 13 ஆவது வயதில் இருந்து இவரின் இலட்சிய வேட்கையாக இருந்து வந்தது.

பாலஸ்தீனத்தின் முதல் தற்கொலைப் போராளியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

- கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை தந்து உள்ளார். நான் என் குழந்தைகளை மிகவும் நேசிக்கின்றேன். ஆனால் தாய் நாட்டின் மீதான எனது பற்றுதலுக்கு குழந்தைகள் மீதான பாசம் ஒருபோதும் தடையாக இருந்து விடாது - இவ்வாறு அடிக்கடிச் சொல்லிக் கொண்டார்.

தாக்குதல் தினத்தன்று காலையில் இவர் இரண்டு கிலோ குண்டை அணிந்து கொண்டு ஒரு கட்டிடத்தை நோக்கிச் சென்றார். காஸாவில் இருந்து இக்கட்டிடத்துக்கு வந்துதான் பாலஸ்தீனர்கள் கைத்தொழில் வலயத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. 


.பாலஸ்தீன நாட்டு விடுதலைப் போராளிப் பெண் ஒருவரின் கதை இது. இவரின் பெயர் ரீம் அல் ரியாஸி. 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். காஸா நகரத்தைச் சேர்ந்தவர். ஹமாஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டார். சின்னக் குழந்தைகள் இருவரின் அம்மா. 


2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி இஸ்ரேலிய படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இவரது தற்கொலைத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டன்ர். பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த 08 ஆவது பெண் போராளி இவர். ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த இரண்டாவது தாய் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. ஹமாஸ் இயக்கத்தில் பாலஸ்தீன விடுதலைக்காக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டு உயிரைத் துறந்த முதல் பெண் போராளியும் இவரே ஆவார். 
பாலஸ்தீன விடுதலைப் போராளிகளில் அநேகர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். 
இஸ்ரேலியர்கள் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது 13 ஆவது வயதில் இருந்து இவரின் இலட்சிய வேட்கையாக இருந்து வந்தது.

பாலஸ்தீனத்தின் முதல் தற்கொலைப் போராளியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 
- கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை தந்து உள்ளார். நான் என் குழந்தைகளை மிகவும் நேசிக்கின்றேன். ஆனால் தாய் நாட்டின் மீதான எனது பற்றுதலுக்கு குழந்தைகள் மீதான பாசம் ஒருபோதும் தடையாக இருந்து விடாது - இவ்வாறு அடிக்கடிச் சொல்லிக் கொண்டார். 
தாக்குதல் தினத்தன்று காலையில் இவர் இரண்டு கிலோ குண்டை அணிந்து கொண்டு ஒரு கட்டிடத்தை நோக்கிச் சென்றார். காஸாவில் இருந்து இக்கட்டிடத்துக்கு வந்துதான் பாலஸ்தீனர்கள் கைத்தொழில் வலயத்துக்கு செல்ல வேண்டி இருந்தது.

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இங்கு ஒவ்வொரு நாளும் திரள்வார்கள். சோதனைச் சாவடியில் சோதனைகள் செய்யப்பட்ட பிற்பாடே கைத்தொழில் வலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 
இவர் இஸ்ரேலிய இராணுவத்தை நோக்கி முன் நகர்ந்தார். எச்சரிக்கை ஒலி எழுப்பியது சோதனையில் ஈடுபட்டு இருந்த இராணுவத்தினரின் கருவி . இவர் சமயோசிதமாக செயல்பட்டார். முடவரைப் போல் நடித்தார். 
காலில் பொருத்தப்பட்டு இருக்கின்ற உலோகத் தகடுகள் காரணமாகவே கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பியது என இராணுவத்தினருக்கு சொன்னார்.

முழுமையாக இவரை சோதனை செய்ய வேண்டும் என்று இராணுவத்தினர் முடிவெடுத்தனர். வேறு ஒரு பகுதிக்கு இவரை கொண்டு சென்றனர். இப்பகுதியில் இராணுவத்தினர் சிலரும், பொலிஸாரும் பாலஸ்தீனர்களின் பைகளை சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.

பெண் ஒருவர் வந்து சோதிப்பார் என்றும் அது வரை காத்திருக்க வேண்டும் என்றும் இவருக்கு அறிவிக்கப்பட்டது. உடலில் பொருத்தி வைத்து இருந்த குண்டை இவர் தகுந்த தருணம் பார்த்து வெடிக்க வைத்தார். 
இவரது இத்தாக்குதலில் இஸ்ரேலிய சிப்பாய்கள் இருவர், பொலிஸ் ஒருவர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டமையுடன் இஸ்ரேலியர்கள் ஏழு பேரும், பாலஸ்தீனியர்கள் நான்கு பேரும் காயம் அடைந்தனர். 










ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி

Posted by Rikaz Network Inc. 12:22 PM, under | No comments


மேங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். இவர் தேவைபட்டால் கவர்னர் முதல் ஜனாதிபதி வரை சென்றாவது தனது மத உரிமையை மீட்க திட்டமிட்டுள்ளார்.

"இந்த விஷயத்தில் முன் வைத்த காலை பின் வாங்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை" என்று ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் ஹதியா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

கல்லூரி DCயிடமிருந்து ஊக்குவிக்கும் அளவுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றாலும் அவரிடமிருந்து நேரடியாகவோ அல்லது கல்லூரி நிர்வாகத்தின் மூலமாகவோ பதிலை எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.
.
ஹதியா தன்னுடைய இரெண்டாம் வருடத்தில் இருந்து ஹிஜாப் அணிய தொடங்கியுள்ளார்.ஹதியாவின் ஹிஜாப் அணிவதை கல்லூரி நிர்வாகம் வரவேற்கவில்லை ,இதற்க்கு கல்லூரி தரப்பில் கூறும் கூரணம் சீருடை சட்டத்தை இது மீருவதாக உள்ளது என்பதே ஆகும்.

முதலில் பெண்களுக்கான அறையில் இருந்து பாடங்களை எழுத ஹதியாவுக்கு கல்லூரி அனுமதி அளித்திருந்தது பிறகு கல்லூரிக்கு வருவதை விட்டு அவரை நிர்வாகம் தடை செய்தது.இவர் கல்லூரியிலிருந்து தடுக்கப்பட்டு சுமார் ஒரு மாத காலமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் இந்த போக்கை பற்றி தக்ஷினா கன்னட துணை கமிஷனர் சன்னப்பா கௌடாவிற்கு ஹதியா புகார் கடிதம் எழுதியுள்ளார்.துணை கமிஷனரிடமிருந்து சாதகமான மறுமொழி வரவில்லையெனில் பெரியவர்களின் ஆலோசனைக்கு பிறகு ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதிக்கு எழுத இருப்பதாக 17 வயது ஹதியா தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் பெண்களை தங்கள் உடலை மறைப்பதை கட்டாயமாக ஆக்கி இருக்கிறது.ஹிஜாபை மத அடையாளத்திற்காக இஸ்லாம் அணிய சொல்லவில்லை.இந்தியாவில் உள்ள 1.1 பில்லியன் மக்களில் 140 மில்லியன் பேர் முஸ்லிம்கள்.உலக அளவில் இந்தோனேசியா விற்கும் பாகிஸ்தானுக்கும் அடுத்த அதிக முஸ்லிம்களை கொண்ட நாடு இந்தியா.

பாகுபாடு

கடந்த ஒரு வருடமாக ஹிஜாபின் உரிமைக்காக ஹதியா போராடி வந்திருக்கிறார்.இவருடைய இந்த முயற்சிக்கு கல்லூரியில் உள்ள 50 முஸ்லிம் மாணவர்களும் ,15 முஸ்லிம் அல்லாத மாணவர்களும் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

கல்லூரியில் பதற்றம் உண்டாக்குவதாக முதன்மை ஆசிரியர் கூறுகிறார் ஆனால் என்னுடைய உரிமையை மீட்க்கும் காரணத்திற்காகவே இதை நான் செய்கிறேன் என்றும் என்னுடைய படிப்பை முடிப்பதே என்னுடைய நோக்கம் என்றும் ஹதியா முதன்மை ஆசிரியரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஹதியா அந்த கல்லூரியில் ஹிஜாபுக்காக போராடும் முதல் பெண் அல்ல.ஆயஷா அஷ்ம்ன் (19) என்ற மாணவி ஏற்கனவே தன்னுடைய தலையை மறைக்க கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு கல்லூரிக்கு மாறியுள்ளார்.

உமைரா காதுன் ,சமூக சேவகர் கூறுகையில் 'ஹிஜாப்' என்பது இஸ்லாத்தின் ஒரு அங்கமாகும் அதை அனைவரும் மதிக்க வேண்டும்.கல்லூரிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது தமது நோக்கம் இல்லை.

இந்து மதம் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக வாழ்வின் அனைத்து நடைகளிலும் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 13% இருக்கும் முஸ்லிம் மக்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.முஸ்லீம்கள் வேலைவாய்ப்பிலும் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்.பொது சேவை ஊழியர்களாக 7%க்கும் குறைவாகவே முஸ்லிம்கள் இருக்கிறார்கள்,ரயில்வே தொழிலாளர்களாக வெறும் ஐந்து சதவிகிதம்,வங்கி ஊழியர்களாக வெறும் நான்கு சதவிகிதம்,இந்திய ராணுவத்தில் உள்ள 1.3 மில்லியனில் வெறும் 29,000 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்கிறது புள்ளி விபரம்.

இதுபோன்ற சமூக பிரச்சனைகளுக்கு அனைத்து முஸ்லிம்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.முஸ்லிம்கள் கல்லூரிகளை அதிகமாக நிர்வகிக்க வேண்டும்.ஹிஜாப்,தாடி போன்றவை இஸ்லாத்தின் கட்டாய கடமை என்று இந்திய அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.இதுபோன்ற இஸ்லாத்தின் கடமைகளை தடுப்பது முஸ்லிம்களின் உரிமையை பறிப்பது போல் ஆகும் என்பதை நாம் அனைவரும் இந்திய அரசுக்கு வலியுறுத்த கடமை பட்டுள்ளோம்.

Saturday, August 13, 2011

மண்ணறை வேதனை

Posted by Rikaz Network Inc. 2:10 AM, under | No comments




இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது... இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.


இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.


உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.




சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் பிணம் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம் வராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பிணத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவனது தந்தையால் அந்த பிணத்தை காண முடியவில்லை. சற்று முன் புதைக்கப்ட்ட பிணமாக அந்த உடல் தெரியவில்லை.


3 மணி நேரத்தில் அவனது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்தப்பிணத்தின் உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.
சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.




அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அந்தப் பிணத்தின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் சொக்கி போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.




இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம் தெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.




உறவினர்கள் அந்தப் பிணத்தை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்தப்பிணமானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய வழியில் நடப்பவர்கள் குழிக்குள் வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்..


திகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான வழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.
அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.




"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.


பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி))


இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?
ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.




அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.


அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து,நல்வழிப்படுத்தி,இந்த மாதிரி கொடுமைகளை எல்லாம் சந்திக்காவண்ணம் நம்மை சொர்க்கவாசியாக்கி வைப்பானாக!

Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook