NeoCounter

NUSRIK BLOG Headline Animator

NUSRIK BLOG

அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.

This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed

Saturday, July 23, 2011

உஷார் !!! DRESSING ROOM ல கேமரா

Posted by Rikaz Network Inc. 2:47 AM, under | No comments

உஷார் !!! DRESSING ROOM ல கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்க படுகின்றனர்..! அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை....!! நண்பர்  வால் ல ஒரு ஐடியா போட்டிருந்தார் ஆங்கிலத்தில் இருந்தது நான் தமிழில் உங்களுக்காக கொடுக்கிறேன்..!! TRIAL ROOM ல் உங்களோட செல் போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள், உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம் காரணம் FIBER OPTIC SIGNAL செல் போன் சிக்னலை தடுக்க கூடியது..! அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!! நீங்கள் நோட்டமிடபடுகிறீர்கள்....!!​! இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க FRIENDS..! (மேலே படத்தில் உள்ளது லேட்டஸ்ட் மாடல் மினி கேமரா)

ஸஹர் செய்வதன் சிறப்பு

Posted by Rikaz Network Inc. 2:41 AM, under | No comments


முன்னுரை

நோன்பை தொடங்கும் முகமாக பின்னிரவில், பஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர். இது தொடர்பாக ஏராளமான செய்திகள் குர்ஆன் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.

1. ஸஹர் செய்வதன் சிறப்பு:

'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642)

நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும் போது நபித்தோழர் ஒருவர் வந்தார், 'ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல்: நஸயீ 2164)

'நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே வித்தியாசமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூற்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி 643)

'ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது, எனவே அதை விட்டு விடாதீர்கள், ஒரு மிடரு தண்ணீரையாவது குடியுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான், வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்: அஹ்மது)

ஸஹரின் சிறப்புகள்: 1.பரக்கத் 2.ஸஹர் நமக்கு மட்டும் உரியது 3.அல்லாஹ்வின் அருள் 4.வானவர்களின் துஆ.

2. ஸஹர் நேரம்:

'பஜ்ர் எனும் வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (அல்குர்ஆன் 2:187)

'வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (2:187) என்ற திருக்குர்ஆன் வசனத்தின் பொருளாவது, இரவின் கருமையும் விடியலின் வெண்மையும் தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூற்கள்: புகாரி 1916, நஸயீ 2171)

'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர் (அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்' என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2002, திர்மிதி 699)

நோன்பின் ஆரம்ப நேரம் பஜ்ர் என்பதால் அந்த நேரத்தை அடையும் வரை ஸஹர் செய்யலாம். அந்த நேரத்திற்கும் சுப்ஹுதொழுகைக்கும் இடையே குர்ஆனின் ஐம்பது வசனங்களை ஓதும் கால அளவு என்பதையும் இரண்டாம் ஹதீஸ் விளக்குகிறது. ஐம்பது வசனங்களை ஓதுவதற்கு சுமார் பத்து நிமிடங்களாவது ஆகும் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. ஸஹர் உணவு:

'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642)

நபி (ஸல்) அவர்கள் ஸஹர் நேரத்தில், 'அனஸே! நான் நோன்பு இருப்பதற்கு ஏதேனும் கொடுங்கள்' என்று கேட்டார்கள். பிலால் (ரலி) அவர்களின் பாங்குக்குப் பிறகு நான் பேரீத்தம்பழங்களையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவர்களுக்கு கொடுத்தேன். 'அனஸே! என்னோடு உணவு அருந்த யாரையேனும் பாருங்களேன்;' என்று நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள். நான் ஜைது பின் தாபித் (ரலி) அவர்களை கூப்பிட்டேன், அவரும் வந்தார், நான் ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியைக் குடித்து விட்டேன், அதைக் கொண்டே நோன்பிருந்து கொள்கிறேன்' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நானும் நோன்பிருந்து கொள்கிறேன்' என்றார்கள். எங்களோடு ஸஹர் செய்த பிறகு இரண்டு ரக்அத் தொழுதார்கள், பிறகு தொழுகைக்கு சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: நஸயீ 2169)

அன்றைய அரேபியர்களின் உணவு பேரீத்தம் பழங்களும் ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. இந்த உணவை உண்பதற்கு பத்து நிமிடங்கள் என்பது அதிகமேயாகும் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

4. ஸஹருக்கான அறிவிப்பு:

நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ர் தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ர் நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ர் தொழுகைக்கான அழைப்பாகும்.

பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. ஏனெனில் அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 1994, அபூதாவூது, நஸயீ 2172)

பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்! நபிமொழி. (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) நூற்கள்: புகாரி 1918, முஸ்லிம், நஸயீ)

பல ஊர்களில் ஸஹருக்காக மக்களை எழுப்புவதற்காக 'தப்ஸ்' எனும் கொட்டு அடித்துக் கொண்டு ஒருவர் வருவது வழக்கமாக இருக்கிறது. பல சமயங்களில் நாய் கடிக்கு அவர் ஆளாக நேர்வதையும் அதனால் அந்த பகுதிக்கு அவர் வருவதை தவிர்ப்பதையும் நாம் அறிவோம். ஆனால் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையை பின்பற்றினால் இந்த சிக்கலில் இருந்து தவிர்ந்து கொள்ள இயலும். ஒரு நபிவழியை பின்பற்றிய நன்மையும் நமக்கு உண்டு. இரண்டு முஅத்தின்களை நியமியத்து இரண்டு பாங்கு சொல்ல வைக்க வேண்டும்.

5. விடி ஸஹர்:

விடி ஸஹரில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணத்திலும், ஸஹர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் படுக்கைக்குச் செல்வோர் நேரத்தை தவற விட்டு விட்டு ஸஹர் நேரம் முடிந்த பிறகு எழுந்திருப்பர். இவர்கள் எதுவும் சாப்பிடாமல் நோன்பைத் தொடர்வர். இப்படிப்பட்ட விடி ஸஹர் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவர்களிடம் உள்ளது.

இவர்களது நோன்பு கூடி விடும், ஆனால் இவர்கள் ஸஹரின் பாக்கியத்தை இழந்து விட்டார்கள்.

மற்றொன்று ஸஹர் நேரம் முடிந்த பிறகு எழுந்து சாப்பிட்டு விட்டு நோன்பு இருப்பார்கள். இப்படிப்பட்ட விடி ஸஹர் இன்னும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவர்களிடம் உள்ளது.

இவர்களது நோன்பு, நோன்பு ஆகாது.

6. ஸஹரை தாமதிப்பது:

'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர் (அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்' என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, திர்மிதி 699)

சுப்ஹ்க்குரிய பாங்குக்கு நெருக்கத்தில் சுமார் பத்து நிமிடங்களுக்கு முன்பிலிருந்து ஸஹர் செய்வது நபிவழி என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது. 

7. ஸஹரை வரவேற்பது:

ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள், 'அருள் நிறைந்த ஸஹ்ரே வருக! வருக!' என்று வரவேற்பார்கள். (அறிவிப்பவர்: அல்இர்பால் பின் சாரியா (ரலி), நூல்: நஸயீ 2165)

8. பிரத்தியேக ஸஹர்:

ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே! என்று தோழர்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல. எனக்கு குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் சில அறிவிப்பில், 'எனது இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1922, முஸ்லிம் 2010)

9.சந்தேகமான பஜ்ர்:

'உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு ஏமாற்றி (தடுத்து) விட வேண்டாம். நீளவாக்கில் (செங்குத்தாக) தென்படும் இந்த வெண்மையானது (அடிவானில்) பரவலாகத் தெரியும் வரை அதுவும் உங்களை ஏமாற்றி (தடுத்து) விட வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), முஸ்லிம் 1996)

நபி (ஸல்) அவர்கள், தமது கையை கீழே தாழ்த்தி பின்னர் மேலே உயர்த்திக் காட்டி, இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாக தெரியும் வெளிச்சம் ஃபஜ்ர்) அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கை விரல்களை விரித்துக் காட்டி இவ்வாறு (அடிவானத்தில் நாலாபக்கமும் பரவலாகத் தெரியும் வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்) என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), முஸ்லிம் 1994)

செங்குத்தான கதிர்கள் அடிவானில் இருப்பது பஜ்ரின் அடையாளம் அல்ல என்பதும் பஜ்ரின் நேரம் வெளிச்சம் பரவலாக தெரிய வேண்டும் என்பதும் நபி (ஸல்) அவர்கள் பஜ்ர் நேரத்தை அறிந்து கொள்ள கற்றுத் தந்த முறையாகும்.

10. ஸஹரில் நிய்யத்:

பஜ்ர் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்கப் போவதை முடிவு செய்து விட வேண்டும்.

'பஜ்ருக்கு முன்பு யார் (நோன்பிருக்க) முடிவு செய்யவில்லையோ அது நோன்பு அல்ல' (அறிவிப்பவர்: ஹப்ஸா (ரலி), நூற்கள்: அபூதாவூது, அஹ்மது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

சுன்னத்தான நோன்புகளுக்கு இந்த நிபந்தனை இல்லை என்பதையும், விடிந்த பிறகும் கூட நோன்பு இருக்கப் போவதாக நபி (ஸல்) அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

முடிவுரை:

ஸஹருக்கு பல மணி நேரத்திற்கு முன்பே உணவருந்தி விட்டு படுக்கைக்குச் செல்வோர் சங்கைக்குரிய ஸஹரை இழந்ததோடு சில வேளை ஃபஜ்ர் தொழுகையையும் இழந்து விடுகிறார்கள். ஸஹர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!

Saturday, July 9, 2011

பேஸ் புக் மூலம் ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி!

Posted by Rikaz Network Inc. 4:40 AM, under | No comments

வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார். இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார்.


யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார். பேஸ் புக் பாவனையாளர்களான பல வயதுக்காரர்களையும் கைக்குள் போட்டுக் கொள்வார். இவர் அழகான தோற்றம் உடையவர். குழைந்து பேசுவார்.


அனுதாபத்தை பெறுதல், கவர்ச்சி காட்டுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பணம் பறிக்கின்றமை இவரின் வாடிக்கை. பெற்றோர் இறந்து விட்டனர் என்பார், வெளிநாட்டில் படிக்க பெருந்தொகை நிதி தேவை என்பார், மன பாதிப்பு உடையவர் போல கைகளை சவர அலகால் அறுத்துக் காண்பிப்பார். - இவையெல்லாம் அனுதாபம் பெறுகின்றமைக்காக. காதலிக்கின்றமை போல் நடிப்பார்,




 கிளுகிளுப்பு ஊட்டுகின்ற வார்த்தைகள் பேசுவார். - இவையெல்லாம் கவர்ச்சி காட்டுதல் என்கிற உத்தியின் கீழ். ஸ்கைப், தொலைபேசி ஆகியவற்றின் மூலமாக தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்வார்.


பணம் கிடைத்தமையுடன் அனுப்பியவருடனான தொடர்பை அறுத்துக் கொள்வார். சாவகச்சேரியின் கொமர்ஷல் வங்கியில் உள்ள இவரின்கணக்கு (Commercial Bank A/C No.: 8126000481) ஒன்றுக்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.

மகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு இருக்கின்ற பணத் தொகையை பார்த்தபோது வங்கியிலேயே தாய் மயங்கி விழுந்த சம்பவமும் இடம்பெற்று உள்ளது. யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி .

இந்நபரின் பெயர் ஜெய்சன். யுவதியின் கணக்குக்கு வருகின்ற பணத்தை சொந்தக் கணக்குக்கு இவர் மாற்றிக் கொள்வார். தற்போது யுவதியின் கையடக்கத் தொலைபேசி இவரின் பாவனையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கின்றபோது இவர் படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார்.

இம்மோசடிகள் குறித்து இலங்கைப் பொலிஸாருக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன. இம்மோசடிகள் குறித்த பூரண தகவல்களை பொலிஸார் திரட்டி வருகின்றனர். அத்துடன் ஏமாற்றுப் பேர்வழிகளான யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரின் நடவடிக்கைகளை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றார்கள்.

இதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் நாடுகளில் வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள். வெளிநாட்டு நீதிமன்றங்களின் பிடியாணை உத்தரவுகள் மூலம் சர்வதேச பொலிஸாரைக் கொண்டு யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரைக் கைது செய்கின்றமை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகின்றார்கள்.

பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களை மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் இந்த யுவதியால் ஏமாற்றப்பட்டவர்கள் வேறு யாராவது இருக்கின்ற பட்சத்தில் எம்முடன் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்க முடியும்.
 மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட கொமர்ஷல் வங்கிக் கணக்கு இலக்கம் :- 8126000481 மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் :- 0094778200114, 0094772398030 மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கைப் கணக்கு முகவரிகள் :- madhu, karthika

..நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5-1)


Monday, July 4, 2011

கடமையான குளிப்பும், நிறைவேற்றும் முறையும்

Posted by Rikaz Network Inc. 4:09 AM, under | No comments


-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
“நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6)
குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்புகடமையாகிவிடும். அவை பின்வருமாறு:
விந்து வெளிப்படல்:
“இச்சை நீர்வெளிப்பட்டால் வுழூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114, இப்னுமாஜா-504, அபூதாவூத்-206)
இச்சை நீருக்கும் விந்துக்கும் வித்தியாசம் உண்டு. விந்து (மனீ) கடினமான வெள்ளை நிற திரவப் பொருளாகும். இச்சை நீர் (மதீ, வதீ) வெள்ளை நிறமான கடினமில்லாத சாதாரண திரவப் பொருளாகும். இது சிறுநீர் கழிக்குபோது அல்லது இலேசான உணர்வின்போது வெளியாகும்.
அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்படமாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப் பவர்: உம்மு ஸுலைம் (ரழி), ஆதாரம்: புகாரி-273, முஸ்லிம்-313, அபூதாவூத்-237)
உடலுறவு கொள்ளல்: 
உடலுறவு கொள்ளும்போது விந்து வெளிப்பட்டால்தான் குளிப்பு கடமைஎன்பது இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமாக இருந்தது. பின்பு இச்சட்டம் மாற்றப்பட்டு (ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்தால் விந்துவெளிப்படாவிட்டாலும் குளிப்பு அவசியமாக்கப்பட்டு) விட்டது. (ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-209, திர்மிதி-108,111, முஅத்தா-76)
ஒருவர் தனது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, பின்பு (உறவுகொள்ள) முயற்சித்தால் குளிப்பு கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-610, நஸாயி-191)
மாதவிடாய் ஏற்படல்:
நபியே! மாதவிடாய்ப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும் அது (அசுத்தமான) ஓர் உபாதை. எனவே மாத விடாய் காலத்தில் (உடலுறவுகொள்ளாமல்) பெண்களை விட்டு விலகி இருங்கள். அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை (உடலுறவு கொள்ள) நெருங்காதீர்கள். மாதவிடாயிலிருந்து (குளித்து) அவர்கள் சுத்தமாகி விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)
மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டு விடு. அது நின்றதும் குளித்து விட்டுத் தொழு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி-310, இப்னுமாஜா-621, நஸாயி-202)
மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளை திருப்பி (களா) தொழ வேண்டியதில்லை. (புகாரி-310) ஆனால் விடுபட்ட பர்ளான ரமழான் மாத நோன்பை திருப்பி நோற்க வேண்டும்.
தொடர் உதிரப்போக்கு:
மாதவிடாய் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஏற்படும். அந்த நாட்களை கடந்த பின், தொடர்ந்தும் இரத்தம் வெளியேறுவதைத் தான் தொடர் உதிரப்போக்கு எனக் கூறப்படும். இத்தொடர் உதிரப்போக்குள்ளவர்கள்மாதவிடாய் ஏற்படும் நாட்களைக் கணக்கிட்டு விட்டு குளித்து சுத்தமாகித் தொழ வேண்டும்.
தொடர் உதிரப்போக்கைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது ”அது மாத விடாய் அல்ல. அது ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோய். (அதனால்தான் இந்த இரத்தம் தொடர்ந்து வெளியேறுகிறது) என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி-316, இப்னு மாஜா-626, முஸ்லிம்-333)
நான் சுத்தமாகாதவாறு தொடர்ந்து இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன். எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இதற்கு முன் வழக்கமாக) உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்கு தொழுகையை விட்டு விடு. பிறகு குளித்து விட்டு துணியை இறுக்கிக் கட்டி விட்டு தொழு என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-623, அபூதாவூத்-286, நஸாயீ-208)
பாதிமா பின் அபீ ஹுபைஷ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கி றேன். எனவே தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அதுமாதவிடாய் அல்ல! நரம்பு சம்பந்தப்பட்ட நோயாகும். உன் மாதவிடாய்நாட்களில் தொழுகையை தவிர்த்துக் கொள். பிறகு குளித்து விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்துக் கொள். பாயில் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தாலும் சரியே என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-624, திர்மிதி-125)
பிரசவத் தீட்டு ஏற்படல்: 
பிரசவத்தின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்படும்போது தொழக் கூடாது. அது நின்ற பின் குளித்து விட்டு தொழ வேண்டும். அந்நாட்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பி (களா) தொழ வேண்டி யதில்லை.

குளிக்கும் முறை:

கடமையான குளிப்பை நிறைவேற்ற முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின், மர்மஸ்தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும். அதன் பின் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப்படுத்தி)க் கொள்ள வேண்டும். குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆண், பெண் இவ்வாறுகடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் குளிப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போன்று வுழூ செய்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)
நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தால் ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்து, முகத்தை கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தம் மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு (குளித்த இடத்திலிருந்து) சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். (அறிவிப்பவர்: மைமூனா (ரழி) (ஆதாரம்: புகாரி-258, முஸ்லிம்-317, நஸாயீ-253, இப்னுமாஜா-573)
நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-108, அபூதாவூத்-250, இப்னுமாஜா-579)
அஸ்மா பின்த் ஷகல் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய்க் குளிப்பு பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உங்களில் ஒருவர் (மாதவிடாய் குளிப்பின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்ந்து தலையின் சருமம் நனையும் வரை கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள் ‘அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹானல்லாஹ், அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று கூறினார்கள்.
உடனே நான் இரத்தம் படிந்த இடத்தில் தடவிக் கொள் என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன் னேன்.
மேலும் அஸ்மா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு நபியவர்கள் தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துக் கொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையில் சருமம் நனையும் அள வுக்கு நன்கு தேய்த்துக் கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று என்றார்கள். (அறிவிப்பர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்-552)
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு, மறு முறையும் உட லுறவு கொள்ள விரும்பினால், வுழூ செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத், ஆதாரம்: முஸ்லிம்-308, இப்னுமாஜா-587, நஸாயீ-262)
எங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என்று உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம் வுழூச் செய்து விட்டு தூங்கலாம் என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-280, முஸ்லிம்-306, நஸாயீ-259)

Tags

Everyone!!!!!

Everyone!!!!!
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

I like on facebook