கணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?
கணனி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted. கணனி வேகம் குறைதல் இவ்வாறு பிரச்சினைகள் தரும் போது கணனி பாவனையாளர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் Format Hard Disk , சரி Format செய்தவுடன் கணனி பழைய நிலைக்கு வரும்
wireless password தொலைந்து விட்டதா ?
உங்கள் wireless password தொலைந்து விட்டதா ? அல்லது உங்களின் wireless நெட்வொர்க்கின் கடவுச்சொல் உங்களுக்குத் தெரியாதா .கவலை வேண்டாம் இது நம் அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்னை தான் .இதை தீர்பதர்கென்றே உருவாக்கப்பட்
தட்டச்சுப் பயிற்சி (Typing Practice)
கணனித் துறையில் வல்லுநர் ஆவதற்கான முதல் தெரிவு வேகமான தட்டச்சுப் பயிற்சியே ஆகும்.தட்டச்சும் போது எந்ததெந்த விரல்களை எந்தெந்த அழுத்திகளில் வைக்க வேண்டும் என சரியாக விளங்கி பயிற்சி செய்தால் ஒருசில - nusrik.blogspot.com.
உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி
நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook applications ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன - Premiumbloggertemplates.com.
This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed
Monday, November 8, 2010
அமெரிக்க ஐரோப்பிய உற்பத்திகளில் பன்றிக்கொழுப்பு
மரணமும் மண்ணறை வாழ்வும்
இன்று உலகில் காணப்படுகின்ற எந்த மதமாயினும் எந்த இனமாயினும் எக்கலாசாரமாயினும் அவை அனைத்தும் ஒருமித்து உடன்படுமொருவிடயம்தான் மரணம். மரணத்தை யாரும் மறுப்பதில்லை. அவ்வாறே மறுத்தாலும் அது இன, மத, மொழி வேற்றுமைகளுக்கு அப்பால், குழந்தை, இளைஞன், வயோதிகன் என்ற பருவங்களையும் தாண்டி, ஆண், பெண் என்ற பால்வித்தியாசங்களையும் மீறி வந்தேதீரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதனை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (அது) மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்)களில் நீங்கள் இருந்தாலும் சரியே!” (அன்னிஸா:78)
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களைவைத்துப் பார்க்கும்போது மரணம் என்பது நிச்சயம் என்பதை விளங்கமுடிகிறது. வாழ்கின்றபோது மனிதர்களுக்குரிய கடமையாதெனில் கொடூரமான மரணவேதனையிலிருந்தும் அதன் பின்னுள்ள அகோரமான மண்ணறையின் தீங்குகளிலிருந்தும் அதனைத் தொடர்ந்துவரும் பயங்கரமான நரகப்படுகுழியின் தண்டனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் தன் உலக வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகும்.
அவ்வாறு தன் வாழ்வைச் சிறப்புற அமைத்துக்கொள்ளும் பட்சத்தில் அவனது மரணவேதனை இதமானதாகவும் மண்ணறை சுவனப்பூஞ்சோலையாகவும் இறுதி ஒதுங்குமிடம் சதாவும் இன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிரந்தர சுவனமாகவும் அமையும்.
அந்தவகையில் நபியவர்கள் கூறிய இரண்டு விதமான மனிதர்களுடைய மரணநிலைபற்றியும் அவர்களது மண்ணறை வாழ்க்கை பற்றியும், பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கும் பிரபலமானதொரு ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். முதலாவது முஃமினான மனிதனின் மரணம். அடுத்து இறை நிறாகரிப்பாளனது மரணம். முதலில் ஒரு முஃமினுடைய மரண நிலைபற்றி அறிந்துகொள்வோம்.
முஃமினின் நிலை
அல்லாஹ் கூறுகின்றான்:
إن الذين قالوا ربنا الله ثم إستقاموا تتنزل عليهم الملئكة الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون
“எமதிரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி பின்பு (அதில்) உறுதியாக நிலைத்துமிருந்தார்களே அத்தகையோரது (மரணவேளையில்) வானவர்கள் இறங்கிவந்து மறுமைபற்றி நீங்கள் அச்சங்கொள்ளாதீர்கள். (இவ்வுலகில் விட்டுச்செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகங்கள் பற்றியும்) கவலைகொல்லாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்தீர்களே அச்சுவனபதியைக்கொண்டு நன்மாராயம் பெறுங்கள்” என்று கூறுவர்.” (ஹாமீம் ஸஜ்தா:30)
பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஒருமுறை அன்ஸாரிய சகோதரர் ஒருவரின் ஜனாஸாவிலே கலந்துகொள்வதற்காக நாம் நபியவர்களோடு சென்றுகொண்டிருந்தோம். மண்ணறை மைதானத்தை அடைந்ததும் நபியவர்கள் அங்கு அமர்ந்துகொண்டார்கள். நாமும் அண்ணலாரைச் சூழ அமர்ந்தோம். எமது தலைகளில் பறவைகள் வந்து நிற்குமளவுக்கு நாம் எவ்விதச் சலனமுமின்றி நபியவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தோம். நபியவர்கள் அவரது கையிலிருந்த ஒரு சிறு தடியினால் நிலத்தில் தட்டிவிட்டு தலையை உயர்த்தி “கப்ருடைய வேதனையைவிட்டும் அல்லாஹ்விடம் அபயம் தேடிக்கொள்ளுங்கள்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறினார்கள்.
பின்பு இவ்வாறு கூறினார்கள்:
ஒரு முஃமினான அடியான் மரணப்படுக்கையில் இருக்கும்போது சூரியனின் பிரகாசத்தோடும் வெண்நிற முகத்தோடும் “நாஷிதாத்” எனும் மலக்குகள் வானிலிருந்து இறங்கிவருவார்கள். அவர்களிடம் சுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கபனும் சுவனத்தின் வாசனைத் திறவியங்களும் இருக்கும். அவ்வானவர்கள் கண்ணெட்டும் தூரம்வரை அவருக்கு முன்னால் வீற்றிருப்பார்கள். பின்பு மலகுல்மௌத் வந்து அவரது தலைப்பகுதியில் அமர்ந்து “ஏ நல்ல ஆன்மாவே...! அல்லாஹ்வின் மன்னிப்பையும் திருப்பொறுத்தத்தையும் பெற்ற நிலையில் வெளியேறு” என்று கூறுவார். ஒரு குவலையிலிருந்து நீர் வடிந்தோடுவதுபோன்று அம்மனிதனின் ஆன்மா அவ்வுடலைவிட்டும் இலகுவான முறையில் வெளியேறும்.
மரண வீட்டில் இருக்கும் மையித் தன்னை விரைவாக கப்ரில் கொண்டுசென்று அடக்கம்செய்யுமாறும் கூறும். அதனைத் தாமதப்படுத்தும்போதெல்லாம் “ஏன் என்னைத் தாமதப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்கும். மிக்க சந்தோசமாக அமைதியாக இருக்கும். அவ்வாறு அம்மையித் பேசுவதை சுற்றியிருக்கும் மனு, ஜின் இனத்தைத் தவிர மற்றைய அனைத்துப் படைப்புகளும் உணர்ந்துகொள்ளும்.
உனது இரட்சகன் யார்? من ربك؟
உனது மார்க்கம் எது? وما دينك؟
உனது வழிகாட்டி யார்? ومن نبيك؟
அல்லாஹ்வே எனதிரட்சகன் ربي الله
இஸ்லாம்தான் எனது மார்க்கம் ديني الاسلام
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் எனது வழிகாட்டி نبيي محمد (صل)
என்று பதிலளிக்கும்.
உடனே வானிலிருந்து ஒரு அசரீரி ஒலிக்கும். صدق عبدي “எனதடியான் உண்மையுரைத்துவிட்டான்”
பின்பு அவ்வானவர்கள் அம்மையித்திற்கு அவரது இடது புறத்தில் பயங்கர நரகை எடுத்துக் காண்பிப்பார்கள். எனினும் வாழும்போது செய்த நல்லறங்களுக்காக அவரது வலப்புறத்தில் சுவனத்தை எடுத்துக்காண்பிப்பார்கள். பின்பு அவருக்கு சுவன ஆடைகள் அணிவிக்கப்பட்டு சுவன விரிப்புகளும் விரிக்கப்படும். அதுமுதல் அவ்வான்மா சுவனத்தின் இதமான தென்றல் காற்றை அனுபவித்துக்கொண்டிருக்கும். கண்ணெட்டும் தூரத்திற்கு அம்மண்ணறை விசாலமாக்கப்படும்.
அதன்பின்பு அழகானதொரு மனிதனின் தோற்றத்தில் மனம்வீசும் ஆடைகளை அணிந்துகொண்டு ஒருவர் அம்மையித்திடம் வருவார். வந்து “நீர் வாக்களிக்கப்பட்டிருந்த இந்நாளைக்கொண்டு நெற்செய்திபெறுங்கள்” என்று சுபசோபனம் கூறுவார். அதற்கு அவ்வான்மா “நீர் யார்?” என வினவும். அதற்கு அவ்வுருவம் “நீர் உலகில் செய்த நன்மையான காரியங்களின் மொத்த வடிவம்தான் நான்” என்று கூறும். பின்பு அம்மையித்திற்கு சுவனத்தின் காட்சிகள் காண்பிக்கப்படும். ஆதனைப் பார்த்து ரசித்துக்கொண்டே அவ்வான்மா “ربي أقم الساعة حتى ارجع إلى اهلي ومالي” “எனதிரட்சகனே! எனது குடும்பத்தின்பாலும் சொத்து செல்வங்களின் பாலும் நான் செல்வதற்காக மறுமையை துரிதப்படுத்திவிடு” என்று பிறார்த்திக்கும். புpன்னர் அல்லாஹ் அவ்வுத்தம அடியானை புது மனமகனைப்போன்று மறுமைநாள் நிகழும்வரை உறங்கவைப்பான்.”
ஒரு முஃமினுடைய மரணத்தருவாயும் அதன்பின்னரான மண்ணறை நிகழ்வுகளும் இவ்வாறுதான் அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதேசமயம் ஒரு இறை நிராகரிப்பாளனதுää இணைவைப்பவனது நிலைமை எத்தகையது என்பதையும் நபியவர்கள் எமக்குத்தெளிவுபடுத்தியுள்ளார்கள். தெளிவுபடுத்தியது மாத்திரமின்றி அதிலிருந்து பாதுகாப்புத்தேடுமாறும் வலியுருத்தியுள்ளார்கள்.
நிராகரிப்பாளன்.
“فكانما خر من السماء فتخطفه الطير او تهوى به الريح في مكان سحيق”
உனது மார்க்கம் எது? وما دينك؟
உனது வழிகாட்டி யார்? ومن نبيك؟
اللهم إني اعوذ بك من الجبن والبخل واعوذ بك من أن أرد الى ارزل الامر واعوذ بك من فتنة الدنياء واعوذ بك من فتنة القبر
ஜிஹாத் மதச் சுதந்திரத்திற்கு எதிரானதா? Posted by Aalif Ali | Labels: ஜிஹாத் மதச் சுதந்திரத்திற்கு எதிரானதா? |
இவ்வாறு இரு பாதைகளைக்காட்டிய இறைவன் “நீ இந்தப் பாதையைத்தான் தெரிவு செய்ய வேண்டும்” என்று மனிதனை நிர்ப்பந்திக்கவில்லை. அவரவர் விரும்பும் பாதையை, மார்க்கத்தை,மதத்தைத் தேர்வுசெய்துகொள்வதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளான். அவன் காட்டித்தந்த பாதையில் மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றியுடையவனாகவோ அல்லது நன்றி கெட்டவனாகவோ இருக்க முடியும் என்பதனையும் அல்குர்ஆனில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றான். “நிச்சயமாக நாம் அவனுக்கு (நன்மை, தீமை பற்றிய) வழியைத் தெளிவுபடுத்தினோம். (அதில்) அவன் நன்றியுள்ளவனாக இருக்கலாம். அல்லது (அதனைப் பின்பற்றாது) நன்றிகெட்ட (நிராகரிப்ப) வனாகவும் இருக்கலாம்.” (76:03)
ஜிஹாத் என்ற சொல்லைக் கேட்டதுமே பலரும் உசாராகி விடுகின்றார்கள். ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், இஸ்லாத்தின் குறகிய கால வளர்ச்சியை சீரனிக்க முடியாதவர்கள் இந்த ஜிஹாத் எனும் யுத்தத்தினூடாகவே இஸ்லாம் பரப்பப்பட்டது என்றும் வெற்றிகொள்ளப்பட்ட மக்கள் வாள் முனையில் காட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். வரலாற்று நெடுகிலும் நடந்த யுத்த வெற்றிகளின் பின்பு மக்கள் இஸ்லாத்தில் நுழைந்தமையைக் காரணங்காட்டி லியோனி கைட்டான், கோல்ட்ஸியர்,பண்டலி ஜோஸி, எம்.கியோஜி மற்றும் பெர்னார்ட் லுயிஸ் போன்ற சில அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் இஸ்லாம் வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்று குற்றக் கணைகளைத் தொடுக்கின்றனர்.
உண்மையில் வரலாற்றில் எங்குமே முஸ்லிம்கள் நாடு பிடிக்கும் நோக்கிலோ, தமது இனத்தின் எண்ணிக்கையைக்(Quantity) கூட்டிக்கொள்ள வேண்டுமென்ற அவாவிலோ படையெடுத்துச் செல்லவில்லை. அவ்வாறு எண்ணிக்கையை அதிகரிப்பதால் இஸ்லாம் பலவீனப்படுகின்றதேயல்லாமல் ஒருபோதும் பலம்பெறுவதில்லை. மாறாக அவர்கள் படையெடுத்துச் சென்றதெல்லாம் இரண்டே இரண்டு விடயங்களுக்காகத்தான்.
ஒன்று; முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுருத்தல் வந்தால் அதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்வதற்கும் இரண்டு; அராஜக ஆட்சியின் கீழ் அல்லுற்ற மக்களே அவ்வாட்சியாளர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றி விடுவிக்குமாறு கோரியதனாலும் அடுத்து இறையாட்சியின் அம்மக்களை சுபீட்சமடையச் செய்யவும்; தாம்பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறச்செய்யவேண்டும் என்ற உயரிய நோக்கிலுமே படைநடாத்திச் சென்றார்கள். இதற்கு கடந்துசென்ற வரலாறே சான்று.
அல்லுற்ற மக்களை அல்லாஹ் எவ்வாறு காப்பாற்றினான் என்பதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது. “மேலும், மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை (மற்ற) சிலரைக்கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் (பாதிரிகளின்) மடங்களும் கிறிஸ்தவர்களின் வணக்கஸ்தளங்களும் யூதர்களின் வணக்கஸ்தளங்களும் மஸ்ஜிதுகளும் - இவற்றில் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகக்கூறப்படுபவையாவும் இடிக்கப்பட்டுப் போயிருக்கும்” (22:40) என்கின்றான்.
“The Spread of Islam in the world” “உலகம் முழுதும் பரவிய இஸ்லாம்” என்ற தனது நூலிலே சேர் தோமஸ் ஆர்ணல்ட் எனும் கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்“முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் நிலவிய மதப் பாதுகாப்புணர்வு அதே காலகட்டத்தில் சின்ன ஆசியா (ஆசியா மைனர்) வாழ்ந்த கிறிஸ்தவர்களையும்கூட சல்ஜுக்கிய துருக்கியர்களைத் தங்களின் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளும்படி விரும்பச் செய்தது. எட்டாவது மைக்கல் (1261-1282) என்பவரின் ஆட்சியில் சின்னாசியாவில் சிறு கிராமவாசிகள் துருக்கியர்களைத் தமது கிராமங்களை வென்று ஆட்சி செலுத்துமாறு வேண்டினர். பலர் தமது நாடுகளைவிட்டு துருக்கிய ஆட்சி நிலவும் பிரதேசங்களுக்குக் குடியேறினர்.” என்றவாறு வரலாற்று உண்மையை எழுதுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில்“நெடுங்காலம் ரோம் ஆட்சியில் அனுபவியாத சுதந்திர வாழ்க்கையை அக்கிறிஸ்தவ மக்கள், இஸ்லாமிய ஆட்சியின் முதல் நூற்றாண்டிலேயே அனுபவித்தார்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ்தான் நிம்மதியாக வாழ்ந்துள்னர்” என தனது நூலிலே எழுதுகின்றார்.
ஒரு தீமையைத் தடுப்பதற்கும் அவ்விடத்தில் நன்மையை விதைப்பதற்கும் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் ஜிஹாத் (முயற்சி, உழைப்பு) என்று அழைக்கமுடியும். அது நாவின் மூலம், எழுத்து மூலம் என பல்வேறு பரிமாணங்களில் இடம்பெறலாம். இவற்றில் சாத்தியமில்லாது போகும் இறுதிக் கட்டத்தில் மாத்திரம் தான் ஆயதமேந்திப் போராடியாவது அத்தீமையை ஒழித்துக்கட்டுவதற்கான திட்டங்களில் இரங்கமுடியும். இதுவல்லாமல் எடுத்த எடுப்பிலேயே ஜிஹாத் என்று கூறிக்கொண்டு களத்தில் ஆயுதங்களுடன் குதிக்குமாறு இஸ்லாம் ஒரு போதும் கூறவில்லை.
உண்மையும் அதுதான். இஸ்லாம் ஒரு சாந்தி மார்கம். இது அமைதியையே விரும்புகின்றது. இவ்வுண்மையை உணரும்தருவாயில் நீங்களே இஸ்லாத்தின்பால் நாட்டம்கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்.
ஆழ்கடலினுள் ஸ்ஜுத் செய்த இளைஞன்

ஆழ்கடலினுள் ஸ்ஜுத் செய்த இளைஞன்
.....ஆலிப் அலி.....
நான் பத்தொன்பது வயது நிரம்பிய ஒரு இளைஞன். வாழ்க்கையின் ஏகபோக உரிமைகளை அனுபவிப்பதில் விடாப்பிடியாய் இருந்தேன். பணம், மாடி வீடு, வாகனம் என்பவைதான் வாழ்க்கை என மிதம்மிஞ்சி எண்ணியிருந்தேன். எனக்கும் சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களும் எவ்விதத்திலும் என்னைவிட தரம் குறைந்தவர்களல்லர்.
ஒரு வெள்ளிக்கிழமை. பொழுதுபோக்கிற்காக கடலில் சுழியோடச்செல்ல நண்பர்களோடு தயாராகிக்கொண்டிருந்தேன். ஜும்ஆப் பிரசங்கத்திற்காக அதானும் சொல்லப்பட்டது. வழமையாக ஐவேளைத் தொழுகைக்கும் அதானொலிப்பது என் செவிகளுக்கு உணர்த்தப்பட்டாலும் அதிலிருந்து விதிவிலக்கானவன்போல் நான் வேறு திசையில் சென்றுவிடுவேன். அன்றும் அப்படித்தான் பலரும் பள்ளிவாயிலை நோக்கி நடைபோட நாமோ ஆழ்கடல்நோக்கி எமது ஓடத்தைச் செலுத்திக்கொண்டிருந்தோம்.
சுழியோடும் கருவிகளோடு கடலினுள் குதித்து மகிழ்ந்துகொண்டிருந்தோம். அச்சந்தர்ப்பத்தில்தான் எதிர்பாராத விதமாக திடீரென அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்தது. இப்போது நினைக்கும்போதும் என் உடலெங்கும் நடுக்கம்கொள்கின்றது. வாயினுள் நீர்செல்லாது மூக்கு, வாய் இரண்டையும் மூடி தேவைக்கேற்ப ஒட்சிசன் வாயுவைத் தந்துகொண்டிருந்த அந்த இறப்பர் குழாய் உடைந்துவிட்டது.
நான் தினரினேன். எனது நுரையீரல் வலுவாக அழுத்தப்பட்டது. இதயம் நின்றுவிட்டதுபோல் உணர்ந்தேன். கடல் நீரும் வாயினுற் புகுந்து தொண்டைக்குழியை அடைத்தது. உடல் அங்கங்கள் தடுமாறின. நுரையீரல் சுவாசிக்க ஒட்சிசனைக்கேட்டுப் போராடியது. என்னைச் சுற்றி இருள் கவ்விக்கொண்டது. நண்பர்களோ என்னைவிட்டும் வெகு தூரத்தில் இருந்தார்கள். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை. என் வாழ்வின் நினைவுகள் என் கண்முன் அலைமோதின.
மனிதன் எவ்வளவு பலவீனமானவன் என்பதை அன்றுதான் நான் அறிந்துகொண்டேன். அல்லாஹ் அவனது வல்லமையை சில நிமிடங்களில் எனக்கு உணர்த்திவிட்டான். அவனிடம் உதவிதேடினேன். நான் செய்த அசட்டுத்தனங்கள் எனக்கு ஒன்றன் பின் ஒன்றாகப் படம்போட்டுக்காட்டப்பட்டன. “கலிமா...” அதுதான் என் நினைவுக்கு வந்தது.
“அஷ்ஹது” என்று மொழிந்ததுதான் தாமதம் தொண்டைக்குழி விக்கிக்கொண்டது. நான் கலிமாவை மொழிய முனையும்போதெல்லாம் மறைவிலிருந்து ஒருகை என் கழுத்தை நெரிப்பதுபோன்றிருந்தது. கடுமையாக முயற்சித்தேன். முடியவில்லை. “இறைவா என்னை மீட்டிவிடு... என்னைக் காப்பாற்று...” என்று உள்ளம் கத்திக் கதறியது.
“ஒரு நிமிடம்..... நிமிடம்..... ஒரு வினாடி..... ” என்று கெஞ்சியது. எவ்வித சாத்தியப்பாடுகளுமில்லை. உணர்ச்சிகளனைத்தையுமே இழந்துவிட்டேன். இறைவனை நினைக்கும் கடைசித்தருனம். நான் மூர்ச்சிக்கலானேன். திடீரென்று.....
திடீரென்று ஒரு காற்று என்நெஞ்சை உந்தித்தள்ளியது. சூழ்ந்திருந்த இருள் அகன்று போனது. என் விழிகள் திறந்துகொண்டன. நான் கண்டேன்.... என் வாயில் ஒட்சிசன் குழாயைவைத்துப் பொருத்தும் ஒரு நண்பரை அங்கு நான் கண்டேன். அவர் எனக்கு மென்மேலும் உதவ முயற்சித்தார். அவர் முகத்தில் புன்னகையையே நான் அவதானித்தேன். அதிலிருந்து நான் நலமாக இருக்கின்றேன் என்பதை உணர்ந்துகொண்டேன். அக்கணம் என் உடல் அங்க அவயங்கள் அனைத்தும் கலிமாவை மொழிந்தன. இறைவனுக்கு நன்றியுரைத்தன. கடல் நீரோடு கண்ணீரும் கரைந்துகொண்டிருந்தது....
அதன் பின் நான் நலமாக கடலில் இருந்து வெளியேற்றப்பட்டேன். சிகிச்சையும் பெற்றேன். அன்றிலிருந்து என் வாழ்க்கைப்போக்கு முற்றாக மாற்றங்கண்டிருந்தது. அதிகமதிகம் அல்லாஹ்வைத் தொழுபவனாகவும் அவனுக்கு நன்றியுரைப்பவனாகவும் மாறியிருந்தேன்.
நாட்கள் புரண்டன. ஒரு நாள் ஆழ் கடலில் எனக்கு நேர்ந்த அந்தப் பயங்கர சம்பவம் என் நினைவுக்கு வந்தது. உடனே சுழியோடும் சாதனங்களோடு ஆழ்கடலினுள் தனியாகவே சென்றேன். அதே இடத்தை அடைந்ததும் மனம் நிரம்ப அல்லாஹ்வைப் புகழந்து அவனுக்காக சிரம்பணிந்தேன். அதனைப்போன்றதொரு ஸ்ஜுதை என் வாழ்வில் நான் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. எனக்கு முன்பு அவ்விடத்தில் வேறுயாரும் அவ்வாறு ஸ்ஜுது செய்திருப்பார்களென்றும் நான் நினைக்கவில்லை.
அந்த இடம் நாளை மறுமையில் எனக்காக அல்லாஹ்விடம் சான்று பகரும். சிலவேளை நான் அந்த ஆழ்கடலில் சிரம் தாழ்த்தியமைக்காக அல்லாஹ் எனக்கு அருள்பாலித்து என் பாவங்களை மன்னிக்க்கூடும்.
அனைத்துக்கும் அவனே போதுமானவன்.
இது கதையல்ல நிஜம்
நன்றி : அல்-முஜ்தமா
Saturday, November 6, 2010
பித்அத் தவிர்ப்போம்!
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி
“அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும்.
பித்அத்:
“பித்அத்” என்பது ஓர் அறபுப் பதமாகும். “பதஅ” என்ற வினைச் சொல்லிலிருந்து இது உருவானதாகும். புதியது, முன்னுதாரணமின்றித் தோற்றுவிக்கப்பட்டது என்பன இதன் பாஷை ரீதியான அர்த்தங்களாகும்.
“வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது என்ப தையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?” (2:117)
இங்கே வானம்-பூமியை எவ்வகை முன்னுதாரணமுமின்றி முதன்முதலில் உருவாக்கியவன் என்ற அர்த்தத்தில் ஃபதீஃ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறே;
“நான் தூதர்களில் புதியவனாக இல்லை.”
(46:9)
என்ற வசனத்தில் எனக்கு முன்னரும் தூதர்கள் வந்துள்ளனர். நான் முதன்முதலாக வந்த தூதனல்ல என்ற அர்த்தத்தில் “பித்அன்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் “பித்அத்” என்பது பாஷை ரீதியில் புதியது என்ற அர்த்தத்தைத் தரும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
மொழி ரீதியாகப் “புதியது” என்பது இதன் அர்த்தமென்றாலும், இஸ்லாமிய ஷரீஆவின் கண்ணோட்டத்தில் அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் அங்கீகாரமில்லாத மார்க்கத்தின் பெயரால் நிறைவேற்றப்படும் விடயங்கள் “பித்அத்” என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. இந்த அடிப்படையில் நோக்கும் போது, உலகத்திலுள்ள எல்லாப் புதியவைகளும் பித்அத்தில் வந்து சேராது. உதாரணமாக, நபி(ஸல்) அவர்கள் அவர்களது காலத்திலிருந்த ஒட்டகம், கழுதை போன்றவற்றில் பயணம் செய்தார்கள். நாம் வாகனங்களிலும், விமானங்களிலும் பயணம் செய்கின்றோம். ஷரீஆ ரீதியில் இது பித்அத் – புதியதில் அடங்குமா? என்றால் அடங்காது. மொழி ரீதியில் இவையெல்லாம் பித்அத்தான – புதிய கண்டுபிடிப்புகள் என்றாலும் இவை மார்க்கத்தில் உருவான புதியவை கிடையாது. சிலர் இரண்டையும் போட்டுக் குழப்பி விடுகின்றனர். அது மட்டுமல்ல! நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் பயணம் போகவில்லை. நாம் போகின்றோம். எனவே, நபி(ஸல்) அவர்கள் செய்யாத புதிய அமல்(?)களையும் நாம் செய்யலாம் என்று வாதிடுகின்றனர்.
தவறான புரிதலை வைத்துத் தமது தவறை நியாயப்படுத்தவும், அத்தவறு சரியானதுதான் எனச் சாதிக்கவும் முற்படுகின்றனர். எனவே, ஷரீஆ ரீதியில் “பித்அத்” என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
“…அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி, துறவறத்தை அவர்கள் புதிதாக உருவாக்கிக் கொண்டனர். அதை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அதை அவர்கள் அதற்குரிய முறைப்படி பேணவுமில்லை. அவர்களில் நம்பிக்கைகொண்டோருக்கு அவர்களுக்குரிய கூலியை வழங்கினோம். அவர்களில் அதிகமானோர் பாவிகள்.” (57:27)
இந்த வசனம் சில அம்சங்களைப் பின்வருமாறு கூறுகின்றது;
கிறிஸ்தவர்கள் மீது துறவரம் – அதாவது, திருமணம் முடிக்காமல் தமது வாழ்வை இறை வழிபாட்டுக்காக ஒதுக்குவது விதிக்கப்படவில்லை.
அதை அவர்கள் தாமாகவே தம் மீது விதித்துக்கொண்டனர்.
அதை அவர்கள் இறை திருப்பதியைப் பெறும் நோக்கத்தில்தான் உருவாக்கினர்.
எனவே, “பித்அத்” என்றால்;
ஆதாரம் அற்றதாக இருக்கும்.
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
அதைச் செய்வதன் மூலம் நன்மை நாடப்படும்.
அது உருவாக்கப்பட்ட நோக்கம் நல்லதாக இருக்கலாம். (ஆனால், நன்மை கிடைக்காது.)
மேற்படி முக்கிய அடையாளங்கள் பித்அத்தில் இருக்குமென்பதை இந்தக் குர்ஆன் வசனம் மூலம் விளங்கலாம். இதே கருத்தை இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் பல்வேறுபட்ட வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
பித்அத் குறித்து அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்தும் போது பின்வருமாறு பல விளக்கங்களைத் தந்துள்ளனர்.
இமாம் இப்னு தைமிய்யா(றஹ்) அவர்கள் இது குறித்து கூறும் போது;
“மார்க்கத்தில் பித்அத் என்றால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ மார்க்கமாக விதிக்காதவையைக் குறிக்கும். பித்அத் என்றால் கட்டாயப்படுத்தியோ அல்லது விரும்பத் தக்கது என்றோ ஏவப்படாததைக் குறிக்கும்!” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(பதாவா இப்னு தமிய்யா 4:107-108)
மனித செயற்பாடுகளை “இபாதத்”, “ஆதத்” என இரு வகையாகப் பிரிக்கலாம். “இபாதத்” என்பது வணக்க வழிபாட்டைக் குறிக்கும். “ஆதத்” என்றால் சாதாரண பழக்க-வழக்கங்கள், வழக்காறுகளைக் குறிக்கும். இபாதத் விடயத்தில் அதைச் செய்வதற்கு “ஆதாரமிருக்கின்றதா?” எனப் பார்க்க வேண்டும். ஆதாரமில்லாதவை செய்யத் தகாதவையாகும். “ஆதத்”தான விடயங்களைப் பொறுத்த வரையில் “தடை இருக்கின்றதா?” எனப் பார்க்க வேண்டும். தடையில்லாத அனைத்தும் ஆகுமானவை என்பதே அர்த்தமாகும். தடை இல்லாவிட்டால் ஆகுமானது என்பது ஆதத்தின் நிலையாகும். அங்கீகாரத்திற்கான ஆதாரம் இல்லாவிட்டால் கூடாது என்பது இபாதத்தின் நிலைப்பாடாகும்.
ஒருவர் முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு தொழுகிறார். இதை நாம் கூடாது என்கிறோம். உடனே “முதுகுக்குப் பின்னால் கை கட்டித் தொழக் கூடாது என்று ஆதாரம் தாருங்கள்!” என அவர் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் எம்மால் காட்டவும் முடியாது. இந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் எதைச் செய்தார்கள் அல்லது செய்யச் சொன்னார்கள் அல்லது அங்கீகரித்தார்கள் என்பதற்கே ஆதாரம் தேட முடியாது. எதைச் செய்ய ஆதாரம் கிடைக்கிறதோ அதை அப்படியே செய்ய வேண்டும். அதற்கு மாற்றம் செய்ய முடியாது.
ஆனால் “ஆதத்” விஷயம் இதற்கு நேர் மாற்றமானதாகும். கேக் சாப்பிடலாம், குளிர் பானங்கள் குடிக்கலாம், பணிஸ் சாப்பிடலாமென்று ஒவ்வொன்றுக்காக ஆதாரம் தேட முடியாது. தடுக்கப்பட்டவை கூறப்பட்டிருக்கும். தடுக்கப்படாதவை அனைத்தும் ஆகுமானவையென்ற நிலைப்பாட்டில் செயற்பட வேண்டும். சிலர் இந்த விடயத்தையும் குழப்பிக்கொள்கின்றனர்.
“கூட்டு துஆ” கூடாது என்றால், “கூடாது என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று கேட்கின்றனர். இதைச் செய்பவர்தான் ஆதாரம் காட்ட வேண்டுமென்ற அடிப்படையைப் புரியாமல் இப்படிக் கேட்கின்றனர்.
அல்லது ஒலிபெருக்கியில் அதான் சொல்வதற்கு என்ன ஆதாரம்? மத்ரஸாக் கட்ட என்ன ஆதாரம்? என்றெல்லாம் கேட்டுத் தமது பித்அத்தை நியாயப்படுத்த முற்படுகின்றனர்.
எனவே ஏற்கனவே நாம் குறிப்பிட்ட (57:27) வசனத்தின் படியும், ஏலவே நாம் குறிப்பிட்ட இமாம் இப்னு தைமிய்யாவின் வரைவிலக்கணப் படியும் ஆதாரமில்லாத (இபாதத்) வழிபாடு-மார்க்க நிலைப்பாடு என்பவை பித்அத்தானவை என்பதையும், அவற்றைத் தவிர்ப்பது கட்டாயமென்பதைப் புரியலாம்.
இமாம் இப்னு தைமிய்யாவின் மற்றொரு விளக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது;
“குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும், இந்த உம்மத்தின் ஆரம்ப கால ஸலஃபுகளுக்கும் முரணான இபாதத்துகளும், கொள்கைகளும் பித்அத்களாகும்!”.
(ஃபதாவா இப்னு தைமிய்யா 18:346, 35:414)
குர்ஆன்-ஸுன்னாவில் இல்லாத இறை வழிபாட்டைச் செய்வது பித்அத் என்பது போன்றே, குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரணான கொள்கை-கோட்பாடுகளும் பித்அத் என இமாமவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
மற்றும் சில அறிஞர்களைப் பொறுத்த வரையில் குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரண்படுவதை பித்அத்தில் சேர்க்காமல் பாவத்தில் மட்டுமே சேர்ப்பர். உதாரணமாக, மஸ்ஜிதுக்குள் நுழையும் போது ஒருவர் வலது காலை முன்வைத்து உள்நுழைய வேண்டும். ஆனால் ஒருவர் இடது காலை முன்வைத்து நுழைகிறார். இது ஸுன்னாவுக்கு முரணானதாகும். ஆனால் “இது பித்அத்தா?” எனக் கேட்டால், “பித்அத்!” என்று கூறப்பட மாட்டாது. எனவே, குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரணானதாக இருந்தால்தான் அது பித்அத் என்று கூற முடியாது என்று விளக்குவர்.
இந்த விளக்கம் நியாயமானதென்றாலும், இடது காலை முன்வைத்துப் பள்ளிக்குள் நுழைந்தவரிடம் “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” எனக் கேட்டால், அவர் “தவறுதலாக நடந்து விட்டது!” என்றோ, அசட்டையாகத் தனது பொடுபோக்கால் நடந்ததாகவோ கூறினால் அது பித்அத்தாகாது என்பது உண்மையே! ஆனால், அவர் இடது காலை முன்வைத்துப் பள்ளிக்குள் நுழைவதுதான் மார்க்கமென்று அதற்கு மார்க்கச் சாயம் பூசினால் அப்போது அந்தத் தவறு பித்அத் என்ற நிலைக்கு வந்து விடும். எனவேதான் குர்ஆன்-ஸுன்னாவுக்கும், ஸலஃபுகளின் ஏகோபித்த முடிவுகளுக்கும் முரணான இபாதத்துகளும், கொள்கைகளும் பித்அத் என இமாமவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
தனது கூற்றிற்கு அவர் உதாரணம் கூறும் போது;
“கவாரிஜ்கள், ஷீஆக்கள், கதரிய்யாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்றோர் கொண்டிருந்த குர்ஆன்-ஸுன்னா, ஸலபுகளின் ஏகோபித்த முடிவுகளுக்கு முரணான கொள்கைகள் பித்அத்தாகும்!” என்று குறிப்பிடுகின்றார்கள்.
இவ்வாறே “பள்ளியில் பாட்டுப் பாடி, இசை இசைத்துக் கூடி திக்ர் செய்வோர், தாடி வழிப்பது, கஞ்சா அடிப்பது போன்றவற்றை நன்மை நாடி செய்வோர் போன்றவர்களும் பித்அத்வாதிகள்..” என்று குறிப்பிடுகின்றார்கள்.
தாடியை வழிப்பதும், கஞ்சா அடிப்பதும் ஹறாமாகும். எனினும் இவர்கள் இவற்றை மார்க்கமாகக் கருதிச் செய்கின்ற போது அவை பித்அத்தாகவும் மாறுகின்றன. எனவே, குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரணாக இருப்பவையும் பித்அத்தாகும் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
நன்மையை நாடுதல்:
நன்மையான எல்லா விடயங்களையும் நபி(ஸல்) அவர்கள் எமக்குக் காட்டித் தந்து விட்டார்கள். குறிப்பிட்ட ஒரு வழிபாட்டை அல்லது கொள்கையை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடித் தரக் கூடியது என்று கூறுவதென்றால் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். ஆதாரம் இல்லையென்றால் அது பித்அத் என்ற பட்டியலில் அடங்கி விடும்.
இது குறித்து இமாம் ஷாதிபீ(றஹ்) அவர்கள் விளக்கும் போது;
ஷரீஅத்திற்கு ஒப்பாக மார்க்கத்தில் புதிதாக உருவானதே பித்அத்தாகும். அதைச் செய்வதன் மூலம் நன்மை நாடப்படும்.
“இங்கே மார்க்கத்தில் புதிதாக உருவான ஒரு வழிமுறை என்று குறிப்பிடப்படுவது கவனிக்கத் தக்கதாகும்!”
உலகியல் நடைமுறைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாததைப் பயன்படுத்துவது பித்அத்தில் அடங்காது. மார்க்க நடைமுறைகளில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாததைச் செய்வதுதான் தடுக்கப்பட்டதாகும்.
அல்லாஹ் மார்க்கம் பூரணமாகி விட்டதாகக் கூறுகின்றான்;
“..இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு நான் முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது பூரணப்படுத்தி விட்டேன். மேலும் நான் இஸ்லாத்தையே உங்களுக்கு மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்..” (5:3)
உலகம் பூரணமாகவில்லை. அது வளர்ந்துகொண்டேயிருக்கும். அதில் தடுக்கப்பட்டவை தவிர்ந்த அனைத்தையும் பயன்படுத்தலாம். ஆனால், மார்க்கத்தின் பெயரில் “இதைச் செய்தால் நன்மை கிடைக்கும்!”, “இதை இப்படித்தான் செய்ய வேண்டும்!” என்று கூறுவதென்றால், அதற்கான வழிகாட்டல் கட்டாயம் குர்ஆன்-ஸுன்னாவின் மூலம் பெற்றிருக்க வேண்டும். இல்லாத போது அவை பித்அத்களாக இருக்குமே தவிர இபாதத்தாக இருக்காது.
இந்த அடிப்படையில் புரியாமல்தான் பஸ்ஸில் பயணம் போவதையும், விமானத்தில் பறப்பதையும் வைத்துக் கூட்டு துஆ, கத்தம், கந்தூரி, ஃபாதிஹா, மவ்லீதை சில அறிஞர்கள் நியாயப்படுத்தி வருகின்றனர்.
இமாம் ஹாஃபிழ் இப்னு றஜப்(றஹ்) பின்வருமாறு கூறுகின்றார்கள்;
“பித்அத் என்றால் அதற்கு ஆதாரமாக அமையத் தக்க எந்த அடிப்படையும் ஷரீஅத்தில் இருக்காது. ஷரீஅத்தில் ஆதாரமிருந்தால் பாஷை ரீதியில் அது பித்அத் என்று கூறப்பட்டாலும் ஷரீஆவின் பார்வையில் அது பித்அத் ஆகாது. யாராவது ஒருவர் ஒரு புதிய விடயத்தை ஆரம்பித்து, அவர் அதை மார்க்கத்துடன் இணைத்தால் அதற்கு மார்க்க அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லாமலிருந்தால் அது வழிகேடாகும். “தீன்” அதை விட்டும் விலகி விட்டது. அந்தப் (ஆதாரமற்ற, மார்க்கமெனக் கருதப்படும்) புதிய செய்தி) கொள்கை சார்ந்த விடயமாக இருந்தாலும் சரி, செயல் சார்ந்ததாக இருந்தாலும் சரி அல்லது பகிரங்க-மறைமுக வார்த்தை(திக்ர்)களாக இருந்தாலும் சரியே! (அவை வழிகேடுகளே!)
ஸலஃபுகள் சில புதியவைகளை “நல்லது!” என்று கூறியிருந்தால், அவை “பாஷை ரீதியான பித்அத்” என்பதையே குறிக்கும்; ஷரீஆச் சார்ந்த பித்அத்தைக் குறிக்காது.
றமழான் மாதத்தில் “கியாமுல் லைல்” தொழுகையை உமர்(ரழி) அவர்கள் ஓர் இமாமின் தலைமையில் தொழ ஏற்பாடு செய்து.
மக்கள் அவ்வாறு தொழுவதைக் கண்டு;
“இந்தப் புதிய நடைமுறை நன்றாக உள்ளது!” என்று கூறியதும் இதே அடிப்படையில்தான்.
(பார்க்க; ஜாமிஉல் உலூம் வல்ஹிகம் 2:127-128)
அதாவது, உமர்(ரழி) அவர்கள் “கியாமுல் லைல்” தொழுகையை மக்கள் ஓர் இமாமின் தலைமையில் தொழுவதைக் குறிக்கும் போது “இந்த பித்அத் நல்லது!” என்று கூறினார்கள். இது “ஷரீஆ ரீதியான பித்அத்” என்ற அர்த்தத்தில் அவர் கூறவில்லை.
ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் “கியாமுல் லைல்” தொழுகையை ஆர்வப்படுத்தியுள்ளார்கள். அவர்களும் சில தினங்கள் ஜமாஅத்தாகத் தொழுவித்தார்கள். அது கடமையாக்கப்பட்டு விட்டால் உம்மத்திற்குச் சிரமமாகி விடும் என்பதற்காகத்தான் ஜமாஅத்தாகத் தொழுவதை விட்டார்கள். அவர்களது மரணத்தின் பின்னர் அந்த அச்சம் தீர்ந்து விட்டது. நபியவர்களின் மரணத்தின் பின் அது வாஜிபாக மாட்டாது. எனவே, ஜமாஅத்தாகத் தொழுவதற்கு ஒரு தடையாக இருந்த அச்சம் நீங்கி விட்டது. அடுத்து மக்கள் சிறு சிறு குழுக்களாகவும், தனித் தனியாகவும் பல அமைப்புகளில் தொழுது வந்தார்கள். அதை மாற்றி அனைவரும் ஒரு முகமாக ஒரே இமாமின் கீழ் தொழுவதற்கான ஏற்பாட்டையே உமர்(ரழி) அவர்கள் செய்தார்கள். அதையே அவர்கள் “நல்ல பித்அத்” என்றார்கள். இங்கே ஷரீஆ ரீதியான பித்அத்தாக அதை அவர் பார்க்கவில்லை. ஏனென்றால், “பித்அத்” என்றால் அதற்கு ஷரீஆவில் ஆதாரமிருக்காது. ஆனால், “கியாமுல் லைல்” தொழுகையை றமழானில் ஜமாஅத்தாகத் தொழ நபிவழியில் ஆதாரமுள்ளது. எனவே, பாஷை ரீதியில்தான் “இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக உள்ளது!” என்று கூறினார்கள். இதைப் புரிந்துகொள்ளாத சிலர் “பாஷை ரீதியான பித்அத்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டதைத் தவறாகப் புரிந்துகொண்டு, “பித்அத்தில் நல்ல பித்அத்களும் உள்ளன!” எனத் தவறாக வாதிடுகின்றனர். இது மிகத் தவறான கருத்தாகும்.
பித்அத்களை மார்க்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அதில் “நல்லது!” என்ற பேச்சுக்கே இடமில்லை. “பித்அத்கள் அனைத்தும் வழிகேடு!” என்பதே நபி(ஸல்) அவர்களது “பித்அத்” பற்றிய தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பை மாற்றியமைக்கும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது என்பதில் உறுதியாக இருப்போமாக!
Wednesday, November 3, 2010
கடல்கள் இடையே உள்ள திரைகள்
in அறிவியல்
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَنِ بَيْنَهُمَا بَرْزَخٌ لاَّيَبْغِيَن
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)
அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. ‘மரஜா’ எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.
இன்றைய நவீன அறிவியல் இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது.
ஆனால், ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சி உறுதி செய்துள்ளார்.
மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றது.
وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)
நதி முகத்துவாரங்களில், அதாவது இரண்டு நதிகள் சந்திக்கும் இடங்களில் உப்பு நீரிலிருந்து சுவைமிகு நீரை தனியாகப் பிரித்து அடையாளம் காட்டும் ஒரு திரை அல்லது மண்டலம் (Pycnocline Zone) உள்ளது. (இம்மண்டலத்தையே திருக்குர்ஆன் திருக்குர்ஆன் ஹிஜ்ரம் மஹ்ஜூரா என்று குறிப்பிடுகின்றது.) இப்பிரிவினை மண்டலம் சுவை நீரிலிருந்தும், உப்பு நீரிலிருந்த்தும் வித்தியாசமான அளவு உப்புத்தன்மை கொண்டுள்ளது.
இந்த இயற்கை நிகழ்வு கடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுகின்றது. மத்தியத்தரைக்கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும்
--
But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment.
Al Quran (20:124)
மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)









